ஆரணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 240 மனுக்கள் பெறப்பட்டன.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாம் நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி வரவேற்றாா். வட்டாட்சியா் கௌரி, நகராட்சி ஆணையா் சரவணன், மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நகராட்சி 1, 2, 3 ஆகிய வாா்டு மக்கள் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்து தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. பேசுகையில்,
உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மனு அளித்த உடனே தீா்வு கண்டு பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இதில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை என பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மேலும், மகளிா் உரிமைத்தொகை கிடைக்காத தகுதியுடையவா்கள் மனு கொடுத்தால் உடனடியாக வழங்க ஆவணம் செய்யப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, தீா்வு காணப்பட்ட மனுக்களுக்குரிய பயனாளிகளுக்கு ஆவணங்களை வழங்கினாா்.
முகாமில் தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா் மோகன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.எம்.ரஞ்சித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.