செய்திகள் :

ஆர்சிபியின் அபார பந்துவீச்சில் பணிந்த பஞ்சாப் கிங்ஸ்; 102 ரன்கள் இலக்கு!

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடி வருகிறது.

பந்துவீச்சில் அசத்தல்; 101 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முதலில் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆர்சிபியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.1 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், ஜோஷ் இங்லிஷ் (4 ரன்கள்), கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (2 ரன்கள்), நேஹல் வதேரா (8 ரன்கள்), ஷஷாங் சிங் (3 ரன்கள்), முஷீர் கான் (0 ரன்), ஹர்பிரித் பிரார் (4 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

நிதானமாக விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். யஷ் தயாள் 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் ரோமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆர்பிசி விளையாடி வருகிறது.

ரூ.10 லட்சம் யாருக்கு? சிஎஸ்கே வீரர் நூர் அகமதை முந்திய பிரசித் கிருஷ்ணா!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நூர் அகமதை முந்தியுள்ளார். ஐபிஎல் 18-ஆவது சீசனில் பிளே ஆஃப்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குவாலிஃப்யர் 1-இல் ஆ... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் ஆர்சிபி பக்கம் இருக்குமா? ஏபிடி வில்லியர்ஸ் கூறுவதென்ன?!

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா? இல்லையா? என்பது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை மட்... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் குறித்து ரோஹித் சர்மா பேசியதென்ன?

ஆட்ட நாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா தனக்குக் கிடைத்த அதிர்ஷடத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பேட்டியில் கூறியுள்ளார். ’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்த... மேலும் பார்க்க

சாதனை படைத்த தமிழன்..! ஐபிஎல் வரலாற்றில் இடம் பிடித்த சாய் சுதர்சன்!

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சாய் சுதர்சனும் இணைந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23 வயது) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.... மேலும் பார்க்க

ஒரே போட்டியில் 3 சாதனைகள்: ஹிட் மேன் என்பதை நிரூபித்த ரோஹித் சர்மா!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை நேற்றிரவு ... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 229 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்... மேலும் பார்க்க