செய்திகள் :

ஆர்.எஸ்.எஸ். கொடியுடன் ஆபரேஷன் சிந்தூர் அத்தப்பூ கோலம்..! கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது வழக்குப் பதிவு!

post image

கேரளத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாசகம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்ட சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்றுமுன் தினம் நிறைவடைந்தது. இது கேரளம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாப்பட்டது. இந்தப் பண்டிகையையொட்டி பூக்காளால் ஆன அத்தப்பூ போடுவது வழக்கம்.

இந்த நிலையில், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் முத்துப்பில்லக்கில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாசகம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கோலம் போடப்பட்டதைத் தொடர்ந்து கோயிலுக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள், அதனை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டனர். இதனால், காவல் துறை அதிகாரிகளுக்கும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 27 பேர் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 223(அரசு உத்தரவை மீறுதல்), 192 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல்) மற்றும் 3(5) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கோயில் அதிகாரிகள் கூறிய நிலையில், இது “ஆபரேஷன் சிந்தூரை கௌரவிப்பதற்காக போடப்பட்டதாக” கேரள பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

கேரள காவல்துறையை கடுமையாக சாடிய கேரள பாஜக தலைவர்ராஜீவ் சந்திரசேகர், “கொல்லம் மாவட்டத்தில் 27 ஆர்எஸ்எஸ் ஆர்வலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

கேரள மாநிலம் ஜமாத்-இ-இஸ்லாமியால் ஆளப்படுகிறதா அல்லது பாகிஸ்தானின் ஆட்சியின் கீழ் உள்ளதா?. எஃப்ஐஆர் உடனடியாக திரும்பப் பெறப்படாவிட்டால் நீதிமன்றத்தை அணுக வேண்டிவரும்” என்று அவர் எச்சரித்தார்.

இதுகுறித்து கோயில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இது போன்ற பிரச்சினை வருவது முதல்முறை கிடையாது. கோயில் திருவிழா நாள்களில் இதுபோன்ற கொடிகளின் வடிவில் கோலமிடுவது வழக்கம். இதனால், 2023 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கேரளத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் இடதுசாரி முன்னணியினருக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையேயான மோதல்கள் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளன.

கேரள ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரத மாதாவின் உருவப் படத்தைக் காட்சிப்படுத்தியது மற்றும் மலப்புரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவிகளை ஆர்எஸ்எஸ் பாடலை பாட வைத்தது என பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இதுவும் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

Row over Onam ‘pookalam’ with Operation Sindoor inscription at Kerala temple; 27 RSS activists booked

இதையும் படிக்க : எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்

ஹரியாணா வெள்ளத்தில் மூழ்கிய 300 மாருதி சுசூகி கார்கள்! என்னவாகும்?

பொதுவாக மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது, கார்கள் வெள்ளத்தில் மூழ்குவது சாதாரண விஷயம் என்றாலும், ஒரே இடத்தில் 300 புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது சாதாரணம் அல்ல.ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜ்ர் மா... மேலும் பார்க்க

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

விநாயகா் சதுா்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகளின்போது 9 போ் நீரில் மூழ்கினா். இவா்களில் 4 பேர... மேலும் பார்க்க

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

‘உக்ரைன் மக்களைக் கொலை செய்வதையும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதையும் நிறுத்துங்கள்’ என்று அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ இந்தியாவைக் குறிவைத்து குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமா் நாளை நேரில் ஆய்வு

பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளாா். பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அத்துடன், ஹிமாசல பிரதேசம், ஜம்... மேலும் பார்க்க

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

இந்திய கலாசாரம், இசையில் ஆா்வமுள்ள அனைவருக்கும் செப்டம்பா் 8 மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அஸ்ஸாமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு இது இன்னும் சிறப்பான நாள். வியக்கத்தக்க திறன் வாய்ந்த இசைக்கலைஞா்களில் ஒர... மேலும் பார்க்க

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

ஹிமாசல பிரதேசத்தில் சினைப் பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், துணி, கயிறு போன்றவையும், 41 ஆணிகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை, உனாவில் உள்ள மண... மேலும் பார்க்க