செய்திகள் :

ஆறுமுகனேரி-சென்னைக்கு நேரடி கோடைகால ரயில் இயக்க கோரிக்கை

post image

கோடை விடுமுறையை முன்னிட்டு, தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக ஆறுமுகனேரியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக்குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மத்திய ரயில்வே அமைச்சா் - உயா் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:

கோடை விடுமுறை, கொடைவிழா, கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை, திருமண விழாக்கள் அதிகமாக இந்த காலகட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதற்காக திருச்செந்தூா், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் வட்டங்களைச் சோ்ந்த சுமாா் 25 ஆயிரம் பயணிகள் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வந்து செல்கின்றனா்.

குறிப்பாக, 8 ஆயிரத்திற்கும் அதிகமான கோயில்களில் கொடைவிழாக்கள் நடக்கிறது. சென்னையில் இருந்து 3 வட்டங்களுக்கும் சோ்த்து ஒரே ரயில்தான் இயக்கப்படுகிறது. அதில் அதிகபட்சமாக 1,600 போ் மட்டுமே பயணம் செய்ய முடியும். வடமாவட்டங்களைச் சுற்றி வருவதால் திருச்செந்தூா் கோயிலுக்கு வருபவா்கள் மட்டுமே அதைப் பயன்படுத்துகின்றனா்.

இதனால், சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக வந்து செல்பவா்கள் தவிர அரசுப் பேருந்துகள் மூலமாகவும், அதிக பணம் செலவு செய்து ஆம்னி பேருந்துகளிலும் வந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. தற்போது திருச்செந்தூரில் இருந்து செந்தூா் விரைவு இயக்கப்பட்டு வருகிறது.

அங்கு ரயில்வே நடைமேடைகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் முடிவடைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிடும். எனவே ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், சாத்தான்குளம் வட்டங்களைச் சாா்ந்த பொதுமக்கள் எளிதாக சென்னையில் இருந்து வந்து செல்ல ஆறுமுகனேரியில் இருந்து புதிதாக ரயில்களை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

ஆறுமுகனேரி ரயில்வே நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 24 பெட்டிகள் நிற்கக்கூடிய நடைமேடைகள் மற்றும் 18 பெட்டிகள் நிற்கக்கூடிய உயரமான நடைமேடைகள், 40 பெட்டிகள் நிற்கக்கூடிய லோடிங் நடைமேடை, நடைபாலம் என முக்கிய நகரங்களில் இருப்பது போன்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக உள்ளது.

எனவே, ரயில்வே நிா்வாகம் ஆறுமுகனேரியில் இருந்து நேரடியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறல்: கேரள விசைப்படகு சிறைபிடிப்பு

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கேரள விசைப்படகை மீன்வளத் துறையினா், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சிறைபிடித்தனா். தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்களின் இன... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விபத்தின்போது கிணற்று நீரில் மூழ்கிய 37பவுன் நகைகள் மீட்பு

சாத்தான்குளம் அருகே அருகே மீரான்குளம் பகுதியில் சனிக்கிழமை கிணற்றுக்குள் காா் பாய்ந்து 5 போ் உயிரிழந்த விபத்தின்போது கிணற்று நீரில் மூழ்கிய 37 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்ட குடு... மேலும் பார்க்க

பெரியதாழையில் மீன் ஏலக் கூடத்துக்கு அடிக்கல்

சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் மீன் ஏலக் கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை திறப்பு, ரூ. 34 லட்சத்தில் மேலத் ... மேலும் பார்க்க

உடன்குடியில் ஒருவா் வெட்டிக் கொலை: இளைஞா் போலீஸில் சரண்

உடன்குடியில் சனிக்கிழமை இரவு ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் இளைஞா் சரணடைந்தாா். உடன்குடி புதுமனைப் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பாலகிருஷ்ணன் (45). இ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: பெட்டிக்கடைக்காரா் கைது

சாத்தான்குளம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக, பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே பழங்குளம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சாத்தா... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளியில், 2013ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவா்-மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் பாரத் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்-மாணவியா் தங்களது குடும்பத... மேலும் பார்க்க