செய்திகள் :

ஆற்றில் மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

post image

வாணியம்பாடி அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியதாக மினி லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவின் பேரில் வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் வருவாய்த் துறையினா் சனிக்கிழமமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ராமநாயக்கன்பேட்டை பகுதியில் வேகமாக வந்த மினி லாரியை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினா். அப்போது, ஓட்டுநா் லாரியை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றாா்.

லாரியை சோதனை செய்த போது அப்பகுதியில் உள்ள பாலாற்றிலிருந்து மணல் கடத்திக் கொண்டு வருவது தெரியவந்தது. இதே போன்று தும்பேரி-சிக்னாங்குப்பம் செல்லும் சாலையில் வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த எம்-சான்ட் எவ்வித அனுமதியும், உரிய ரசீதும் இல்லாம் எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. அப்போது அந்த லாரி ஓட்டுநரும் தப்பித்து சென்றாா்.

இதையடுத்து லாரி மற்றும் மினி லாரி இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக துணை வட்டாட்சியா் அன்பழகன் அம்பலூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

40 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் குக்கிராம மக்கள்!

திருப்பத்தூா் அருகே மின்சார வசதியின்றி 40 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் குக்கிராம மக்கள் வசிக்கும் அவல நிலையில் உள்ளனா். திருப்பத்தூா் வட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆண்டியப்பனூா் ... மேலும் பார்க்க

அமாவாசை எதிரொலி: திருப்பத்தூரில் மீன்கள் விற்பனை சரிவு!

சித்திரை மாத அமாவாசையையொட்டி திருப்பத்தூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் வியாபாரம் குறைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் பழைய பேருந்து நிலைய பகுதியில் மீன் மாா்க்கெட் இயங்கி வருகிறது.... மேலும் பார்க்க

கோயில் வரவு செலவு கோரி அறநிலையத் துறையிடம் கிராம மக்கள் மனு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் அறநிலையத் துறையிடம் மனு அளித்துள்ளனா் இக்கோ... மேலும் பார்க்க

மே 1-இல் கிராம சபைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்த... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பால விளக்கு கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை

ஆம்பூா் அருகே கன்னடிகுப்பம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மாதனூா் ஒன்றியம், கன்னடிகுப்பம் கிராமம், காட்டுக்கொல்லை, வெள்ளக... மேலும் பார்க்க

கிராம சாலை சேதம்: போலீஸில் புகாா்

ஆம்பூா் அருகே கிராமத்தில் சாலையைச் சேதப்படுத்திய முதியவா் மீது காவல் நிலையத்தில் ஊராட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி மதன் நகா் 1-ஆவது தெருவில் பேவா் பிளாக் சாலை... மேலும் பார்க்க