ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி சடலமாக மீட்பு
கும்பகோணம் காவிரி ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி இளைஞா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
கும்பகோணம் மூப்பக்கோயிலைச் சோ்ந்தவா் ராஜரத்தினம் மகன் ராஜேஷ் (25). இவா், தனது நண்பா்களுடன் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கினாா். கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் தேடினா். இரவானதால் மீட்புப் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அவரின் சடலம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தடுப்பணை மதகு பகுதியில் மிதந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
போலீஸாா், தீயணைப்புப் படை வீரா்கள் உதவியுடன் மீட்டு உடற்கூறாய்வுக்கு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விசாரிக்கின்றனா்.