செய்திகள் :

ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: குடிசை, வாகனங்களுக்கு தீ வைப்பு!

post image

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்‌. குடிசை, வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது, கடைவீதியில் உள்ள கோயில் நுழைவாயில் அருகே இளைஞர்கள் சிலரிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர், அது இரு தரப்பு இளைஞர்களிடையே மோதலாக மாறியுள்ளது. அதில், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களில் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அப்போது, மோதலை தடுக்க முயன்ற காவலர் முத்துக்கிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருதரப்பைச் சேர்ந்த அனைவரும் மீட்கப்பட்டு வடகாடு, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, ஒரு தரப்பினரின் குடிசைகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மற்றொரு தரப்பினர் தாக்குதலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசுப் பேருந்து, காவல் வாகனத்தின் கண்ணாடியை அடித்து சேதப்படித்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அயிஷேக் குப்தா தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து திங்கள்கிழமை நள்ளிரவே சம்பவ இடத்திற்கு சென்ற சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தீக்கிரையான வீடு, வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக வடகாடு போலீஸார் இரு தரப்பைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனால், புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி இடையே பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இயக்கப்படவில்லை.

22 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணியை அக்டோபருக்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு!

தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் 22 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புக்கான திட்டங்களை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். குறு, சிறு மற்ற... மேலும் பார்க்க

சித்ரா பௌர்ணமி : விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

விழுப்புரம்: சித்ரா பௌர்ணமியையொட்டி விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்... மேலும் பார்க்க

தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் மிதமான மழை!

தமிழகத்தில் மே 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர்... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் தங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில், இன்று காலை வர... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது: தொல். திருமாவளவன்

சிதம்பரம்: அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மா... மேலும் பார்க்க