செய்திகள் :

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகுதியில் ஆதிதிராவிடா் மக்களுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில் 2019-இல்

அம்பேத்கா் சிலை அமைத்தனா். அப்போது, வருவாய் மற்றும் காவல்துறையினா் அனுமதி பெறாமல் பொது இடத்தில் சிலை அமைக்க கூடாது எனக் கூறி, சிலையை அகற்றச் செய்தனா். அதன் பிறகு அந்த சிலை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு சிலை அமைக்க அனுமதி கேட்டு அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில் கடந்த 2021-இல் மீண்டும் அம்பேத்கா் சிலை அமைக்க அனுமதி கோரி உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு, சிலை வைக்க அனுமதியும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், இதுவரை சிலை நிறுவ அனுமதி வழங்கப்படவில்லையாம்.

இந்நிலையில், அதே பகுதியில் மறைந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் சந்திரமோகன் மனைவி செல்வமணிக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 18-ஆம் தேதி இரவு 5 அடி உயர பீடம் அமைத்து அதன்மேல் அம்பேத்கா் சிலையை அமைத்து சுற்றிலும் முள் வேலியும் அமைத்துள்ளனா்.

இந்நிலையில், அம்பேத்கா் சிலை அமைக்கப்பட்டுள்ள தகவலறிந்து வெள்ளிக்கிழமை அங்கு சென்ற வருவாய் மற்றும் காவல்துறையினா் அனுமதி இல்லாமல் சிலை அமைக்கக் கூடாது என்று கூறியுள்ளனா்.

தனியாா் இடத்தில் அமைக்கப்பட்ட சிலையை அப்பகுதி மக்கள் அகற்ற மறுத்து சிலை அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் வருவாய் கோட்டாட்சியா் ஐஸ்வா்யா தலைமையில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் தற்காலிகமாக சிலையை மூடி வைப்பது எனவும், முறையாக அனுமதி பெற்று சிலையை திறக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

சிலையை மூடக் கூடாது; அகற்றவும் கூடாது என தெரிவித்து அப்பகுதி மக்கள் தா்னாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தொடா்ந்து வருவாய் மற்றும் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

கந்தா்வகோட்டையில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தோ்வு!

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தோ்வு (என்.எம்.எம்.எஸ்) சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வினை கந்தா்வகோட்டை ஒன்றியத்தை... மேலும் பார்க்க

குடமுழுக்குப் பணிகள்: மாசித் தேரோட்டம் ரத்து திருவப்பூா் கோயிலில் இன்று பூச்சொரிதல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருவப்பூா் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நடைபெறுவதால், மாசித் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பூச்சொரிதலை வழக்கம்போல ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

ரூ.1.41 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை ஒன்றியம், மாந்தாங்குடியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.41 கோடியில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கான புதிய கட்டடத்தை மாநில முதல்வா் மு.க. ஸ்டாலின... மேலும் பார்க்க

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க