ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு
ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரி, ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு அளித்தனா்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம் ஆலங்குளம் தனியாா் திருமண மண்டபத்தில்புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ. கே கமல் கிஷோா் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். மகளிா் உரிமைத் திட்டத்திற்கு பெரும்பாலான மனுக்கள் குவிந்தன.
பேரூராட்சி துணைத் தலைவா் ஜான் ரவி உள்ளிட்ட 6 பேரூராட்சி உறுப்பினா்கள் அளித்த மனுவில், பேரூராட்சி அலுவலகம் மற்றும் ரூ. 4.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் தொடங்கப்படாத பேருந்து நிலையத்தை விரைந்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
முகாமில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், கோட்டாட்சியா் லாவண்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, ஆலங்குளம் வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கலந்துரையாடல்: முன்னதாக ஆட்சியா், மருதம்புத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய ஆட்சியா், கல்வித்திறன் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும் அங்குள்ள அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, ஊராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டாா்.