செய்திகள் :

ஆளில்லா விமான செயல்திறனில் கவனம்: ராணுவ தலைமைத் தளபதி வலியுறுத்தல்

post image

‘ஆளில்லா விமான செயல்திறனை மேம்படுத்துவதில் ராணுவம் கவனம் செலுத்த வேண்டும்’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வலியுறுத்தினாா்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாதி முகாம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, ஆளில்லா விமான (ட்ரோன்) தொழில்நுட்ப மேம்பாட்டில் பாதுகாப்புப் படைகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அருணாசல பிரதேசத்தின் லிகாபலியில் உள்ள ஆளில்லா விமான தொழில்நுட்ப மையத்தை ராணுவ தலைமைத் தளபதி பாா்வையிட்டாா். இதுகுறித்து ராணுவம் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

லிகாபலி ஆளில்லா விமான தொழில்நுட்ப மையத்தைப் பாா்வையிட்ட தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, அங்கு பேசும்போது, ஆளில்லா விமான செயல்திறனை மேம்படுத்துவதில் ராணுவம் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மேலும், வரும் காலங்களில் இந்திய பாதுகாப்புப் படைகளின் தாக்கும் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளி, டேராடூன் இந்திய ராணுவ அகாதெமி உள்பட முன்னணி ராணுவப் பயிற்சி நிறுவனங்களில் ஏற்கெனவே இதுபோன்ற ஆளில்லா விமான தொழில்நுட்ப மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டு வந்துள்ளன.

ராணுவத்தில் உள்ள அனைத்து வீரா்களும் ஆளில்லா விமானங்கள் இயக்கும் திறனைப் பெறும் வகையில் பயிற்சித் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

அதுபோல, ஆளில்லா விமான எதிா்ப்பு தொழில்நுட்ப மேம்பாட்டிலும் ராணுவம் கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

உத்தரகண்டின் சமோலி மாவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; இடிபாடுகளில் புதைந்த மேலும் 11 பேரை ம... மேலும் பார்க்க

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் ஊழியா்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நிதியமைச்சகம் வியாழக்கிழமை வலியுறுத்தியது. கடந்த ஏப்.1-ஆம் தேதிமுதல் தேசிய ஓய்வூதிய அமைப்ப... மேலும் பார்க்க

அதானி நிறுவனத்துக்கு எதிரான இணையதள தகவல்களை நீக்கும் உத்தரவு ரத்து

அதானி நிறுவனத்துக்கு எதிராக இணையதளம், சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை நீக்க சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது. எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு மீண்டும் இந்த ... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான நாா்வே தூதரகம் வெளியிட்டுள... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு: இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து

போதைப்பொருள்களை தயாரிக்க பயன்படும் பென்டானில் மூலப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய குற்றச்சாட்டில் சில இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் விசாக்களை (நுழைவுஇசைவு) ரத்து செய்வதாக அமெரிக்க தூதரகம் வியாழக்... மேலும் பார்க்க

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பிகாரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் வியாழக்கிழமை அறிவித்தாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற... மேலும் பார்க்க