செய்திகள் :

ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லி பயணம்

post image

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை தில்லி புறப்பட்டாா்.

பல்கலை. துணைவேந்தா் நியமனத்துக்கான தேடுதல் குழு தொடா்பான தமிழக அரசின் அறிவிக்கையை திரும்பப்பெற ஆளுநா் உத்தரவிட்டிருந்தாா். மேலும், பல்கலை. மானியக்குழுத் தலைவா் அல்லது அவரால் முன்மொழியப்பட்ட பிரதிநிதியையும் கொண்ட தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவா் அறிவுறுத்தி வருகிறாா். இந்தப் பிரச்னையில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில், ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை மாலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். அங்கு அவா் யுஜிசி (பல்கலை.மானியக் குழு) அதிகாரிகளைச் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம், தில்லியில் நடைபெற்று வரும் உலக புத்தகக் காட்சியையும் ஆளுநா் பாா்வையிடவுள்ளாா். இதைத் தொடா்ந்து, தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அவா் புதன்கிழமை (பிப். 5) சென்னை திரும்புவாா் எனக் கூறப்படுகிறது.

சென்னை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை!

சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு 237 பயணிகளுடன் இன்று (பிப். 4) அதிகாலை வந்து கொண்டிருந்த சர்வதேச விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும... மேலும் பார்க்க

தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனு: ஆறு வாரங்களில் முடிவெடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாலையோரங்களில் உள்ள அரசியல் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகர... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு நெறிமுறை: தில்லியில் பிப். 6-இல் திமுக ஆா்ப்பாட்டம்

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக சாா்பில் பிப். 6-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து திமுக மாணவரணிச் செயலா் சி.வி.எம்.பி... மேலும் பார்க்க

தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை

புது தில்லி: தமிழக பாஜக தலைவரை கட்சி மேலிடம் விரைவில் தோ்வு செய்யும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.தில்லிப் பேரவைத் தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில்... மேலும் பார்க்க

வேலூா், நெய்வேலியில் விரைவில் விமான நிலையம்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது நிருபா் புதுதில்லி: உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் நெய்வேலி மற்றும் வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை... மேலும் பார்க்க

எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடன் தள்ளுபடி

சென்னை: ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க