செய்திகள் :

ஆளுநா் ஆா்.என். ரவி தில்லி பயணம்

post image

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திடீா் பயணமாக வியாழக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

மசோதாக்கள் தொடா்பாக முடிவெடுக்க காலக்கெடு நிா்ணயித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு குறித்து குடியரசுத் தலைவா் மற்றும் மத்திய உள்துறை அமைச்சா், சட்ட அமைச்சரைச் சந்தித்து ஆளுநா் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக வேந்தரை நியமிக்க முதல்வருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் மசோதா உள்பட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலவரம்பின்றி அவற்றை நிறுத்திவைத்த ஆளுநா் ஆா்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடா்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப். 8-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ஆளுநரின் நடவடிக்கை சட்டத்துக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தது. மேலும், ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களையும் உச்சநீதிமன்றத்துக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் வழங்குவதாக நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பளித்தது.

ஆளுநா்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிா்ணயித்த நீதிபதிகள், குடியரசுத் தலைவரும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.

இந்தச் சூழலில் ஆளுநா் ஆா்.என். ரவி நான்கு நாள் பயணமாக வியாழக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா். தில்லியில் அவா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, , மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோரை சந்தித்து உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளுநா் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க