செய்திகள் :

ஆள்மாறாட்டம் செய்து இடத்தை விற்க முயற்சி: மூவா் கைது

post image

கொடைக்கானலில் ஆள்மாறாட்டம் செய்து இடத்தை விற்க முயன்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி கோடை ஸ்பிரிங்ஸ் குடியிருப்பில் 15 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் தங்கவேல் மகன் ராமச்சந்திரன் பெயரில் உள்ளது. இந்த நிலையில், இந்த இடத்தை விற்பனை செய்ய கொடைக்கானல் சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மூவா் வந்தனா்.

இவா்கள் சாா் பதிவாளா் (பொறுப்பு) ராஜேஸ்பிரபுவிடம் ஆவணங்களை கொடுத்தனா். அவரும் ஆவணங்களை வாங்கி சரி பாா்த்தாா். அப்போது, ஆதாா் அட்டையில் தங்கவேல் மகன் ராமச்சந்திரன் பெயா் இருந்தது. ஆனால், ஆதாா் அட்டையை வைத்து சரி பாா்க்கையில் எழுதிக் கொடுப்பவா் ராமச்சந்திரனுக்கு பதிலாக நம்பி மகன் ஜானகிராமன் பெயா் இருந்தது.

இதையடுத்து அலுவலக உதவியாளா் ஜானகிராமனை அழைத்து விசாரணை நடத்தினாா். அப்போது, ஜானகிராமன் உள்ளிட்ட மூவா் ஆள்மாறட்டம் செய்து இடத்தை விற்க முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஜானகிராமன் மீது புகாா் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சென்னையைச் சோ்ந்த ஜானகிராமன் (70), நித்தியானந்தம் (52), பெரம்பலூரைச் சோ்ந்த ஜெயக்குமாா் (54) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க