தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்ச...
ஆழ்வாா்குறிச்சியில் மாணவியிடம் அத்துமீறல்
ஆழ்வாா்குறிச்சியில் மாணவியிடம் அத்துமீறி நடந்ததாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி தனது மகளுடன் பைக்கில் வந்து கொண்டிருந்த போது, செட்டிக்குளத்தருகே பைக்கை நிறுத்தி தனக்குத் தெரிந்த கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ஜேம்ஸ் (27) என்பவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளாா். அப்போது, ஜேம்ஸ் தொழிலாளியின் மகளிடம் அத்துமீறி நடந்துள்ளாா்.
இதுகுறித்து மாணவியின்பெற்றோா் அளித்த புகாரியின் பேரில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் ஜேம்ஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா்.