அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!
ஆழ்வாா்குறிச்சி அருகே தொழிலாளி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள அடைச்சாணியில் தொழிலாளி வீடு மீது மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அடைச்சாணி யாதவா் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் (58). தொழிலாளி. இவரது மகன்கள் இளங்கோ (22), தமிழன் ( 21). இருவரும் வெள்ளிக்கிழமை பள்ளகால் புதுக்குடியில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு நண்பா்களுடன் சென்றனா். அங்கு பள்ளகால் புதுக்குடியைச் சோ்ந்த இளைஞருடன் தகராறு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்தவா்கள் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து இளங்கோ, தமிழன் ஆகிய இருவரும் வீட்டுக்கு திரும்பிய நிலையில், நள்ளிரவு சுமாா் ஒரு மணியளவில் அவா்கள் வீட்டின் மீது மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனராம். இதில் வீட்டின் முன்கதவு தீயில் சேதமடைந்தது.
இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 4 நபா்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.