செய்திகள் :

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பின் ரோஹித், கோலி ஓய்வா? சௌரவ் கங்குலி பதில்!

post image

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக, யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற போதிலும், அவர்கள் இந்திய அணிக்காக தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

சௌரவ் கங்குலி கூறுவதென்ன?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் வடிவிலான போட்டிகளில் மிகவும் சிறப்பான சாதனைகள் படைத்திருப்பதாகவும், சிறப்பாக விளையாடும் வரை அவர்கள் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடலாம் என உணர்வதாகவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

india's former captain sourav ganguly
சௌரவ் கங்குலி (கோப்புப் படம்)

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெறப்போகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. அதனால், அந்த விஷயத்தில் என்னால் எதுவும் கூற முடியாது. அவர்கள் ஓய்வு பெறுவார்களா? மாட்டார்களா? எனக் கூறுவது மிகவும் கடினம்.

நன்றாக விளையாடுபவர்கள் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார்கள். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி நன்றாக விளையாடினால், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். ஒருநாள் போட்டிகளில் இருவரும் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர் என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் வருகிற அக்டோபர் 19 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆஷஸ் தொடரில் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா?

Former Indian captain Sourav Ganguly has spoken about the retirement of both senior Indian players Rohit Sharma and Virat Kohli from ODIs.

விரைவில் ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்; பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய ரோஹித் சர்மா!

இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ளார்.ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்... மேலும் பார்க்க

2025-இல் 195 ஸ்டிரைக் ரேட், 57 சராசரி... உச்சத்தில் இருக்கும் டிம் டேவிட்!

ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் இந்தாண்டு டி20 கிரிக்கெட்டில் தனது உச்சத்தில் விளையாடி வருகிறார். ஆஸி.யைச் சேர்ந்த 22 வயதாகும் டிம் டேவிட் மொத்தமாக 286 டி20 போட்டிகளில் 5,604 ரன்கள் குவித்துள்ளார். இந்தா... மேலும் பார்க்க

பொன்னான வாய்ப்பு..! சதமடித்த டெவால்டு பிரெவிஸ் பற்றி ஏபிடி!

சதமடித்த டெவால்டு பிரெவிஸ் பற்றி ஏபிடி பொன்னான வாய்ப்பை ஐபிஎல் அணிகள் தவறவிட்டது எனக் கூறியுள்ளார். தெனாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான வீரர் டெவால்டு பிரெவிஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20... மேலும் பார்க்க

ஆஸி.யின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி; தென்னாப்பிரிக்கா அபாரம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டி டார்வினில் இன்று (... மேலும் பார்க்க

ஐசிசி டி20 தவரிசை: தீப்தி சர்மா முன்னேற்றம்; ஸ்மிருதி மந்தனா சறுக்கல்!

சர்வதேச மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ளது.ஐசிசி வெளியிட்டுள்ள டி20 போட்டிகளுக்கான இந்த தரவரிசையில் இந்திய அணியில் தீப்தி சர்மா பந்துவீச்சாளர்களில் இரண்டாம் இ... மேலும் பார்க்க

டி20களில் அதிக ரன்கள்... விராட் கோலியை முந்திய டேவிட் வார்னர்!

இந்திய வீரர் விராட் கோலியை டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து ஆஸி. வீரர் டேவிட் வார்னர் முந்தியுள்ளார். டேவிட் வார்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஜூன் 25, 2024-இல் தனது ஓய்வை அறிவித்தார். தற்போது, ... மேலும் பார்க்க