செய்திகள் :

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நினைத்து பதற்றமாக உள்ளது: இந்திய அணியின் பயிற்சியாளர்

post image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நினைத்து சிறிது பதற்றமாக இருப்பதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

சிறிது பதற்றமாக இருக்கிறேன்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி போதிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால், இங்கிலாந்துக்கு எதிராக எப்படி செயல்படப் போகிறார்கள் என்பது குறித்து சிறிது பதற்றமாக இருக்கிறேன் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

morne morkel
மோர்னே மோர்க்கல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது மிகவும் முக்கியம் என நினைக்கிறேன். இந்திய அணியின் பந்துவீச்சு தெரிவுகள் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் சிறந்த திறமைகளைக் கொண்டுள்ளனர். கடந்த சில நாள்களாக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும், குறைந்த அளவிலான சிவப்பு பந்து போட்டிகளில் விளையாடியுள்ளதால் சிறிது பதற்றமாகவும் இருக்கிறது.

இதையும் படிக்க: இங்கிலாந்தில் இருந்து திடீரென இந்தியாவுக்குத் திரும்பிய கௌதம் கம்பீர்! என்ன காரணம்?

இளம் இந்திய அணி சிறப்பாக உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும். ஒரு அணியாக வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

டெம்பா என்பதன் பொருள் என்ன தெரியுமா? டெம்பா பவுமா விளக்கம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திட... மேலும் பார்க்க

கேப்டனாக ஆதிக்கம் செலுத்தும் டெம்பா பவுமா!

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சா... மேலும் பார்க்க

முதல் இன்னிங்ஸில் ஜீரோ, இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோ; ஆட்ட நாயகன் மார்க்ரம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உ... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பி... மேலும் பார்க்க

நம்பிக்கை அளிக்கும் மிட்செல் ஸ்டார்க்: இறுதிக் கட்டத்தில் தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மிட்செல் ஸ்டார் இன்னமும் நம்பிக்கையை அளிக்கும் விதமாக பந்துவீசி வருகிறார். முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழக்க, தெ.ஆ. 138க்கு ஆட்டமிழந்தது.இரண்டாம் இன்னிங... மேலும் பார்க்க

ஷுப்மன் கில் இடத்தில் நான் இருந்தால்... ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ட... மேலும் பார்க்க