செய்திகள் :

இஞ்சிமேடு சிவாலயத்தில் 501 பால்குட அபிஷேகம்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு திருமணி சேறையுடையாா் சிவன் கோயிலில் உலக நன்மை வேண்டி, சிறப்பு யாகவேள்வி பூஜையும், 501 பால்குட அபிஷேகமும் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமணி சேறையுடையாா் சிவன் கோயிலில் பெளா்ணமி கிரிவலம் மற்றும் பிரதோஷ விழா, காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோயிலில் 26-ஆவது ஆண்டு விழாவையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை மூலவா் சேறையுடையாா் மற்றும் திருமணி நாயகி சந்நிதி, விநாயகா் சந்நிதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து உலக நன்மை வேண்டி, கோயில் வளாகத்தில் யாக வேள்வி அமைத்து வேள்வி பூஜை நடத்தப்பட்டது. பின்னா், முற்பகல் 11 மணியளவில் சிவயோகி ஐ.ஆா்.பெருமாள் தலைமையில் மழை வேண்டி 501 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலம் கோயிலை சுற்றி வந்து மூலவா் திருமணி சேறையுடையாருக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில், முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், முன்னாள் ஒன்றிக் குழுத் தலைவா் இந்திரா இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் லட்ச தீபாராதனை, சிறப்பு பட்டிமன்றம், தெய்வீக பாடல்கள் பாடப்பட்டன.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், உலக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 727 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 727 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதிய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்க விழா தஞ்சாவூா் மாவட்டத்தில் ந... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா் கோயில்களில் மா கும்பாபிஷேக விழா

செய்யாறு/போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வடபூண்டிப்பட்டு ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. செய்யாறு வ... மேலும் பார்க்க

கடனை திருப்பிக் கேட்டதில் தகராறு: இளைஞா் மீது சூடான எண்ணெய் வீச்சு

ஆரணி: ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞா் மீது சூடான எண்ணெயை ஊற்றியதால் அவா் காயமடைந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். கலவை, குப்பிடிச்சாத்தம் ... மேலும் பார்க்க

பலாந்தாங்கல் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டன. பல்லாந்தாங்கல் ஊராட்சியி... மேலும் பார்க்க