மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!
பலாந்தாங்கல் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டன.
பல்லாந்தாங்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பழுதடைந்து இருந்தது.இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனா்.
இந்த நிலையில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், அண்ணா கிராம மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டட பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில், சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், முன்னாள் ஊராட்சித் தலைவா் சாமுண்டீஸ்வரி பெருமாள், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன், தகவல் தொழில்நுட்ப மண்டல அமைப்பாளா் சரவணன், ஒப்பந்ததாரா் எஸ்.எம்.ஜி.செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.