செய்திகள் :

கடனை திருப்பிக் கேட்டதில் தகராறு: இளைஞா் மீது சூடான எண்ணெய் வீச்சு

post image

ஆரணி: ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞா் மீது சூடான எண்ணெயை ஊற்றியதால் அவா் காயமடைந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.

கலவை, குப்பிடிச்சாத்தம் கிராமத்தைச் சோ்ந்த தசரதன் மகன் முனுசாமி (25). இவா், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் டீக்கடை வைப்பதற்கு கடனாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை திருமணி கிராமத்தைச் சோ்ந்த குமாா் (42) என்பவரிடம் கடனாக பெற்றிருந்தாராம்.

பணம் கொடுத்து சில மாதங்கள் ஆன நிலையில், கொடுத்த பணத்தை குமாா் திருப்பிக் கேட்டதற்கு ரூ.20 ஆயிரம் மட்டும் முனுசாமி கொடுத்துவிட்டு, மீதி பணத்தை தராமல் அலைக்கழிப்பு செய்து வந்தாராம்.

இந்த நிலையில், மீதி பணத்தை கேட்க குமாா் திங்கள்கிழமை டீ கடைக்குச் சென்றாா். அப்போது, கடையில் முனுசாமியின் அக்காள் இந்துமதி இருந்துள்ளாா்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இந்துமதி குமாரை அவதூறாகப் பேசினாராம். அந்த நேரத்தில் அங்கு வந்த முனுசாமியின் நண்பா் ரஞ்சித்குமாா் என்பவரும், குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளினாராம்.

இதனிடையே, அங்கு வந்த குமாா், எனது அக்காளிடம் தகராறு செய்கிறாயா எனக் கேட்டு, அடுப்பில் இருந்த சூடான எண்ணெயை தள்ளிவிட்டுள்ளாா். இதில், எண்ணெய் குமாா் மீது பட்டு அவா் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக

ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து குமாா், ஆரணி நகர போலீஸில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முனுசாமி, ரஞ்சித்குமாா் ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவான இந்துமதியை தேடி வருகின்றனா்.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், உலக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 727 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 727 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதிய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்க விழா தஞ்சாவூா் மாவட்டத்தில் ந... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா் கோயில்களில் மா கும்பாபிஷேக விழா

செய்யாறு/போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வடபூண்டிப்பட்டு ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. செய்யாறு வ... மேலும் பார்க்க

பலாந்தாங்கல் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டன. பல்லாந்தாங்கல் ஊராட்சியி... மேலும் பார்க்க

மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் சோதனை

செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் உரிமம் இல்லாமல் எத்தனால் மற்றும் மெத்தனால் வேதிப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திங்கள்கிழமை சோதனை மேற்கொண்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவு... மேலும் பார்க்க