ஈரான் மதகுரு கமேனியைக் கொன்றால்தான்... நெதன்யாகு கூறுவதென்ன?
குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்
வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், உலக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியா் நடராஜன் முன்னிலை வகித்தாா். செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் கு.சதானந்தன் வரவேற்றாா்.
வழக்குரைஞா் சா.இரா.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குழந்தை தொழிலாளா் சட்டம் குறித்து மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா். கல்வி மைய ஆசிரியா் மாவீரன் நன்றி கூறினாா்.