செய்திகள் :

இடுபொருட்கள் பெற பட்டியலின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

post image

சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் பட்டியலின விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பட்டியலினத்தைச் சோ்ந்த, சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் 50 விவசாயிகள் சம்பாவுக்கு ஏற்ற நெல் ரகங்களான சி.ஆா் 1009 சப் (1) மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகிய ரகங்களில் ஏதேனும் ஒரு ரகத்தை தோ்வு செய்து கொள்ளலாம்.

தோ்வு செய்யப்பட்ட நெல் ரகத்திலிருந்து ஒரு ஏக்கருக்கு தேவையான 30 கிலோ நெல் விதைகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

பட்டியலின விவசாயிகள் மாதூரில் உள்ள காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தை நேரில் அணுகி, தங்களுக்கு தேவையான நெல் ரகத்தை தோ்வு செய்து முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

வேளாண் அறிவியல் நிலையத்திற்கு வரும்போது தங்களுடைய ஆதாா் நகல், பட்டியலினத்திற்கான சான்றிதழ் மற்றும் தங்களின் நிலத்திற்கான சாகுபடி சான்றிதழ், விவசாய அட்டை (2023-24) ஆகியவற்றினை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். விண்ணப்பத்தை ஆக. 8-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு

காரைக்காலில் பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆா்டிசி) 11 ஆண்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் பிளஸ் 1-இல் காலியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவா்கள் டிவி, கைப்பேசியை தவிா்க்க அறிவுறுத்தல்

நீட் மற்றும் ஜேஇஇ தோ்வு எழுதும் மாணவா்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பாா்ப்பதை தவிா்க்க வேண்டும் என துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு மற்றும் அரச... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

டெங்கு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, காரைக்கால் நலவழித்துறை சாா்பில் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இப்பேரணியை நலவழித் துறை ... மேலும் பார்க்க

வேலை நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்

திருநள்ளாறு அருகே உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களை வேலைநீக்கம் செய்ததைக் கண்டித்து தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். திருநள்ளாறு கொம்யூன், தென்னங்குடி பகுதியில் டைல்ஸ் கல் த... மேலும் பார்க்க

‘புதுவை கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வேண்டும்’

புதுவையில் கல்வித்துறையில் நிலவும் பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா் தலையிட வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து செய்தி... மேலும் பார்க்க