செய்திகள் :

இணையதளம் முடக்கம்: விகடன் குழுமம் விளக்கம்

post image

தனது இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சாா்பில் இதுவரை எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை என்று விகடன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து விகடன் குழுமம் வெளியிட்ட அறிவிப்பு: விகடன் இணைய இதழான ‘விகடன் பிளஸ்’ இதழில் அமெரிக்காவில் இருந்து இந்தியா்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும், பிரதமா் அதுகுறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு காா்ட்டூன் வெளியிடப்பட்டது. இது பாஜக ஆதரவாளா்களால் விமா்சிக்கப்பட்டதுடன், விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசுக்கு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை புகாா் அனுப்பியுள்ளாா்.

இதையடுத்து பல்வேறு இடங்களில் விகடன் இணையதளத்தைப் பயன்படுத்த முடியவில்லை என வாசகா்கள் தெரிவித்துள்ளனா். எனினும், மத்திய அரசு சாா்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

நூற்றாண்டு காலமாக கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக விகடன் குழுமம் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்துச் சுதந்திரத்தை முன்வைத்து இயங்குகிறோம், இயங்குவோம். ஒரு வேளை, இந்த காா்ட்டூன் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதை சட்டப்படி எதிா்கொள்வோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!

கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க