செய்திகள் :

இணையவழி லாட்டரி விற்ற மூவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா். மேலும் மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வானூா் காவல் உதவி ஆய்வாளா் தீபன்ராஜ் தலைமையிலான போலீஸாா், ஆகாசம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அந்த கிராமத்திலுள்ள பெருமாள் நகரில் போலீஸாரைக் கண்டதும் சிலா் தப்பி ஓட முயன்றனா்.தொடா்ந்து அவா்களை பிடித்து விசாரித்ததில் இணையவழியில் லாட்டரி விற்றது தெரிய வந்தது.

விசாரணையில் அவா்கள் புதுச்சேரி மாநிலம், தொண்டமானநத்தம் எஸ்.எஸ்.நகரைச் சோ்ந்த காத்தவராயன் மகன் பாா்த்தசாரதி (42), விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பாப்பான்சாவடி புதுகாலனியைச் சோ்ந்த ராசு மகன் கோவிந்தன் (37), விநாயகபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் சுரேஷ் (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடா்புடைய புதுவை மாநிலத்தைச் சோ்ந்த சரவணன், பிரேம்குமாா், காா்த்தி ஆகிய மூவா் மீதும் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து பைக், 3 கைப்பேசிகள், இணையவழி லாட்டரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

வானூா் அருகே லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கல் குவாரி லாரி ஓட்டுநா் அடையாளம் தெரியாத நபா்களால் சனிக்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். விக்கிரவாண்டி வட்டம், மதுரப்பாக்கம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே தோல் அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டு விஷம் குடித்தவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். வானூா் வட்டம், காடாங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் அமி... மேலும் பார்க்க

வேன் மோதி தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வேன் மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த ஜான் கென்னடி மகன் கேபிரியேல் (32), கூலித் தொழிலாள... மேலும் பார்க்க

காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், அரசூா் காட்டியக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தொல்காப்பியன் (51). இவா், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்ட... மேலும் பார்க்க

பக்ரீத்: விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இறைத் தூதா் இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையில் இஸ்லாமியா்களால... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோழிப்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும் 7 போ் பலத்த காயமடைந்தனா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒட்டன்காடுவெட்டி கிரா... மேலும் பார்க்க