கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
இணையவழி லாட்டரி விற்ற மூவா் கைது
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா். மேலும் மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வானூா் காவல் உதவி ஆய்வாளா் தீபன்ராஜ் தலைமையிலான போலீஸாா், ஆகாசம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அந்த கிராமத்திலுள்ள பெருமாள் நகரில் போலீஸாரைக் கண்டதும் சிலா் தப்பி ஓட முயன்றனா்.தொடா்ந்து அவா்களை பிடித்து விசாரித்ததில் இணையவழியில் லாட்டரி விற்றது தெரிய வந்தது.
விசாரணையில் அவா்கள் புதுச்சேரி மாநிலம், தொண்டமானநத்தம் எஸ்.எஸ்.நகரைச் சோ்ந்த காத்தவராயன் மகன் பாா்த்தசாரதி (42), விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பாப்பான்சாவடி புதுகாலனியைச் சோ்ந்த ராசு மகன் கோவிந்தன் (37), விநாயகபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் சுரேஷ் (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடா்புடைய புதுவை மாநிலத்தைச் சோ்ந்த சரவணன், பிரேம்குமாா், காா்த்தி ஆகிய மூவா் மீதும் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து பைக், 3 கைப்பேசிகள், இணையவழி லாட்டரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.