செய்திகள் :

இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவரால் பரபரப்பு

post image

இண்டிகோ விமானத்தில் கவனக் குறைவால் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையிலிருந்து துர்காபூருக்கு 164 பேருடன் இண்டிகோ விமானம் ஞாயிற்றுக்கிழமை புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது விமானியின் அறையில் அவசர எச்சரிக்கை ஒலி திடீரென ஒலித்தது. அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கேபின் குழுவினரை விசாரிக்க அறிவுறுத்தினார்.

அதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது சர்க்கார் என்கிற பயணி அவசர கால கதவு திறப்பதற்கான பட்டனை தெரியாமல் அழுத்திவிட்டதாகக் கூறியிருக்கிறார். மேலும் தான் ஒரு ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சி மாணவர் என்றும் தனிப்பட்ட வேலைக்காக துர்காபூருக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு

இருப்பினும், விமானி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துர்காபூர் விமானத்திற்கான சர்க்கரின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, அவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். பின்னர், இண்டிகோ பாதுகாப்பு குழுவினரால் சர்க்கார் சென்னை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இண்டிகோ விமானத்தில் சற்று பரபரப் ஏற்பட்டது.

Flight bound for Durgapur (West Bengal) from Chennai with 164 people onboard (158 passengers and 6 crew members), was preparing for departure.

கங்கைகொண்ட சோழபுரம்: திமுக - பாஜகவின் அரசியல் ஆதாய நாடகம்! விஜய் விமர்சனம்

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் விவகாரத்தில் திமுக, பாஜகவை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிச... மேலும் பார்க்க

நீதி கிடைக்கும்வரை கவினின் உடலை வாங்க மாட்டோம்: பெற்றோர் திட்டவட்டம்

திருநெல்வேலியில் ஆணவப் படுகொலைச் சம்பவத்தில், சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்கும்வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் த... மேலும் பார்க்க

பாக்கியலட்சுமி வெறும் தொடர் அல்ல; பாடம்: நடிகை நேகா நெகிழ்ச்சி

பாக்கியலட்சுமி வெறும் தொடர் மட்டுமல்ல; மறக்க முடியாத நினைவுகளுடன் கூடிய பாடம் என நடிகை நேகா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பாக்கியலட்சுமி தொடருடன் பணியாற்றியுள்ளதாகவும், நடிப்பின்... மேலும் பார்க்க

சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்: ராஜேந்திர பாலாஜி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி கண்கலங்கி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000: முதல்வர்

புதுச்சேரியில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பி... மேலும் பார்க்க

திருச்சியில் பள்ளி முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு!

திருச்சியில் தனியார் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. திருச்சியில் பிரபல கேம்பியன் மேல்நிலைப்பள்ளியில் 1995 ஆம் ஆண்டு 90 மாணவர்கள் பயின்றனர், அவர்கள் அங... மேலும் பார்க்க