செய்திகள் :

இதயம் - 2 தொடரின் நாயகி யார் தெரியுமா?

post image

இதயம் 2 தொடரில் நடிகை பல்லவி கெளடா நாயகியாக நடிக்கவுள்ளார்.

முதல் பாகத்தில் நடிகை ஜனனி அசோக் குமார் நடித்து வந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் பல்லவி நடிக்கவுள்ளார்.

இதயம் முதல் பாகத்தில் பாரதி என்ற பாத்திரத்தில் நடித்த ஜனனி அசோக்குமார், மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்தில் பாரதியாக யார் நடித்தாலும் ஈடு செய்ய முடியாது என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் பல்லவி கெளடாவின் வருகை சவாலானதாகவே மாறியுள்ளது.

இதயம் 2 தொடரில் ஜனனி நடிக்கவில்லை என்ற அறிவிப்பு வெளியானதும், அத்தொடரில் நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

தற்போது இரண்டாம் பாகத்தில் பல்லவி கெளடா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இருந்த ரிச்சர்ட் ஜோஷ் நாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் ஒரு குழந்தை இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் இரு குழந்தைகளை வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முன்னோட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இதயம் -2 தொடரில்...

இதனிடையே இதயம் -2 தொடரில் நடிக்கும் பல்லவி கெளடா யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவர் ரிச்சர்ட் உடன் ஏற்கெனவே நடித்தவர்தான். தெலுங்கு மொழியில் 2023ஆம் ஆண்டு ஒளிபரப்பான நிண்டு நூரெல்லா சாவசம் தொடரில் ரிச்சர்ட் உடன் சேர்ந்து நடித்துள்ளார். அந்தத் தொடர் தெலுங்கில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தற்போது தமிழில் இதயம் - 2 தொடரில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

இதயம் -2 தொடரில் இருந்து...

2010 முதல் சின்ன திரையில் நடித்துவரும் பல்லவி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 20க்கும் அதிகமான தொடர்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

ரிச்சர்ட் உடன் பல்லவி கெளடா

தற்போது இதயம் - 2 தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மற்ற மொழித் தொடர்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பல்லவி கெளடாவை, இதயம் -2 தொடரில் பாரதி பாத்திரத்தில் நடிக்கவைக்க திட்டமிட்டுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் செயல் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், ஜனனி அசோக் குமாரை மறக்க வைப்பாரா? என ரசிகர்கள் பலர் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதயும் படிக்க | இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!

பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ!

நடிகர் பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் கோதா, மின்னள் முரளி படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்ன... மேலும் பார்க்க

மியாமி ஓபனில் மெஸ்ஸி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்!

மியாமி ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் 6-2, 6-3 என ஜோகோவிச் கிரிகோர் டிமிட்ரியை வீழ்த்தினார். இந்தப் ... மேலும் பார்க்க

எம்புரான் ரூ.100 கோடி வசூல்! மோகன்லால் நெகிழ்ச்சி!

மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எம்புரான் திரைப்படம் மார்ச்.27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது 2019இல் பிருத்விராஜ் இயக... மேலும் பார்க்க

திறமை வெளிப்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.29-03-2025சனிக்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல்... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை: எலா, பாலினி வெளியேறினா்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் பெலாரஸின் அரினா சலபென்கா - அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.முன்னதாக வ... மேலும் பார்க்க

ஆசிய மல்யுத்தம்: ரீதிகாவுக்கு வெள்ளி

ஜோா்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரீதிகா ஹூடா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.மகளிருக்கான 76 கிலோ பிரிவில் களமாடிய ரீதிகா, காலிறுதியில் ஜப்பானின் நோடோகா யமாமோடோவையும், அரையிறு... மேலும் பார்க்க