செய்திகள் :

``இது தான் பாக். உத்தி; இந்தியா அணு ஆயுத மிரட்டலுக்கு பணியாது'' - அசிம் முனீருக்கு இந்தியா பதிலடி

post image

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர்.

அசிம் முனீர் கூறியது என்ன?

அங்கே அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களிடம் பேசிய அவர், "பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு. எதிர்காலத்தில் இந்தியா உடன் பாகிஸ்தானுக்கு போர் ஏற்பட்டு, பாகிஸ்தான் இருப்புக்கு அச்சுறுதல் வந்தால், நாங்கள் அழியும் போது, உலகில் பாதியை நம்முடன் சேர்த்து அழித்து விடுவோம்" என்று கூறினார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் - பிரதமர் மோடி
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் - பிரதமர் மோடி

இந்தியாவின் அறிக்கை

அசிம் முனீரின் இந்த மிரட்டலுக்கு, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி தந்துள்ளது.

அது வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"பாகிஸ்தான் ராணுவ தளபதி அவரது அமெரிக்க பயணத்தின் போது பேசியது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.

அணு ஆயுத மிரட்டல் என்பது பாகிஸ்தானின் வழக்கமான உத்தி ஆகும்.

உங்களுடைய இத்தகைய கருத்துகள் மூலம் உங்களது பொறுப்பற்ற தன்மைப் பற்றி சர்வதேச சமூகம் முடிவுகள் எடுக்கலாம். இது ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்களுடன் கைகோர்த்து செயல்படும் ஒரு நாட்டில் அணு ஆயுத கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தின் மீதுள்ள சந்தேகங்களை உறுதிப்படுத்துகிறது.

இந்த கருத்தை ஒரு நட்பு நாட்டின் மண்ணிலிருந்து பேசியது துரதிர்ஷ்டவசமானது.

இந்தியா ஏற்கெனவே அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது என்பதை தெளிவுப்படுத்திவிட்டது. எங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறையின் அறிக்கை
இந்திய வெளியுறவுத் துறையின் அறிக்கை

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

'தாயுமானவர் திட்டத்தை' அறிமுகப்படுத்திய முதல்வர் - என்ன திட்டம் இது? எப்படி செயல்படும்?

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'தாயுமானவர் திட்டத்தை' தொடங்கி வைத்துள்ளார்.தாயுமானவர் திட்டம் என்றால் என்ன? கூட்டுறவுத் துறை சார்பில் வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள் வீட்டிற்கே நேர... மேலும் பார்க்க

Pension Scheme: "பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?" - நிர்மலா சீதாராமன் விளக்கம்

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கிறது.நேற்று (ஆகஸ்ட் 11), மக்களவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டத்தை நிறைவேற்றினார். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர... மேலும் பார்க்க

இந்தியாவை விட, ரஷ்யாவிடம் ஆயில் அதிகம் வாங்கும் சீனா; வரி போட வாய்தா வாங்கும் டிரம்ப்!

அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் சீனப் பொருள்களுக்கு 145 சதவிகித வரி; சீனாவில் இறக்குமதி ஆகும் அமெரிக்க பொருள்களுக்கு 125 சதவிகித வரி.இப்படி இரு நாடுகளும் மாறி மாறி ராக்கெட் வேகத்தில் பரஸ்பர வரிகளை விதித... மேலும் பார்க்க

TVK: "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" - மதுரை மாநாடு குறித்து விஜய்

தவெக தலைவர் விஜய் மதுரையில் நடைபெற இருக்கும் இரண்டாவது மாநாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர... மேலும் பார்க்க

'உடனடியாக பணிக்குத் திரும்புங்கள்...' - தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களாகப் போராடி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகளுடன் போராட்டக்குழு ந... மேலும் பார்க்க

”திமுக-வின் தோல்வி தெற்கிலிருந்துதான் ஆரம்பிக்கப் போகிறது” - தமிழிசை செளந்தரராஜன் என்ன சொல்கிறார்?

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தெற்கு தேய்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் யாரும்... மேலும் பார்க்க