செய்திகள் :

`இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன்’ ஓராண்டாக திட்டமிட்டு மாணவர் தற்கொலை - பின்னணி என்ன?

post image

டெல்லி அருகில் இருக்கும் நொய்டாவில் உள்ள சாரதா பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தவர் சிவம். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். ஆனால் அதிக நாள்களாக வகுப்புக்கு செல்லவில்லை. ஆனால் விடுதியில் தங்கி இருந்தார். அவர் தனது விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அக்கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் கிடையாது. தனிப்பட்ட காரணங்களால் இம்முடிவை எடுத்திருப்பதாகவும், இக்கடிதத்தை படிக்கும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். கடந்த ஒரு ஆண்டாக திட்டமிட்டு இம்முடிவை எடுத்திருக்கிறேன்.

நான் இரண்டு ஆண்டுகளாக வகுப்புக்கு செல்லவில்லை. எனவே பல்கலைக்கழக நிர்வாகம் எனது இரண்டு ஆண்டுக்கான கட்டணத்தை எனது பெற்றோரிடம் திரும்ப கொடுக்கவேண்டும். எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறேன். இந்திய கல்வி முறையை நினைத்து கவலையாக இருக்கிறது. நாடு பெரிய அளவில் வளர்ச்சியடைய வேண்டுமானால் முதலில் கல்வி முறையில் திருத்தம் செய்யவேண்டும்''என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக தங்களது மகன் வகுப்புக்கு வராதது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தங்களுக்கு எந்த வித தகவலும் கொடுக்கவில்லை என்று மாணவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இத்தற்கொலை குறித்து அனைத்து கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் இதே பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் தன்னை அவமானப்படுத்தியதாக கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து நடந்த போராட்டத்தை தொடர்ந்து பேராசிரியர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``அப்பாகூட கடவுளை பார்க்க போறோம்'' - தந்தையுடன் உயிரை மாய்த்த குழந்தைகள்; கடலூரில் நடந்த சோகம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, சுகன்யா தம்பதியினர்.இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த மாதம் கணவன் மனைவிக்கு... மேலும் பார்க்க

NIA Raid: திண்டுக்கல்லில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை; காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில், பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மத மாற்றம் செய்வதை கண்டித்ததற்காக ராமலிங்கம் கொலை செய்யபட்டதா... மேலும் பார்க்க

நாமக்கல்: கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை; பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த அதிர்ச்சி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில், 18 வ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: கணவனைக் கொன்று டிரமில் உப்பு போட்டு அடைத்து தப்பி ஓடிய பெண்; காதலனுடன் சிக்கியது எப்படி?

ராஜஸ்தான் மாநிலத்தில் கைர்தல்-திஜாரா என்ற இடத்தில் வசிப்பவர் சுனிதா. இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றன. அவர்கள் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவரது கணவர் ஹன்ஸ்ராம் அங்குள்ள ச... மேலும் பார்க்க

செல்போனில் மூழ்கியதை கண்டித்த தாய்; 7 மாதக் குழந்தையுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள சரல்விளையில் வசித்து வருபவர்அப்துல்கலாம் ஆசாத். இவருக்கு சாரா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். பி.ஏ பட்டதாரியான மகள் ஷர்மி (வயது 26) என்... மேலும் பார்க்க

போலீஸை டோரில் தொங்க விட்டு டெம்போவை ஓட்டிய டிரைவர்; நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது?

வாகன சோதனையில் போலீசார்கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலையம். டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு தக்கலை பழைய பேரு... மேலும் பார்க்க