செய்திகள் :

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

post image

உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாத வல்லரசாக இந்தியா மாறும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் ரைசன் என்ற பகுதியில் ரயில் உற்பத்தி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், அதனை சிலர் விரும்புவதில்லை; அவர்களால் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. எல்லோருக்கும் முதலாளி என்று தன்னை நினைக்கும் சிலர், இந்தியாவின் வேகமான வளர்ச்சி பற்றி யோசிக்கின்றனர்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் விலையை அதிகமானதாக மாற்ற முயற்சிக்கும் சிலர், விலையேறினால் இந்திய பொருள்களை மற்றைய உலக நாடுகள் வாங்குவதை நிறுத்தும் என்று கருதுகின்றனர். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், இந்தியா தொடர்ந்து வேகமாக முன்னேறிக் கொண்டேதான் இருக்கிறது. உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாத ஒரு வல்லரசாக இந்தியா மாறும்.

தற்போதைய நிலையால், பாதுகாப்புத் துறைசார்ந்த ஏற்றுமதிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 24 நாடுகளுக்கு பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்து இந்தியா அனுப்பி வைக்கிறது. இதுதான் இந்தியாவின் வலிமை. இந்தியா ரூ. 24,000 கோடிக்குமேல் பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த நிலையில், அதனைக் குறிப்பிட்டுத்தான் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாகத் தெரிகிறது என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவுகின்றன.

Union Minister Rajnath Singh’s Sharp Dig At Trump Over Tariff Bomb

அமெரிக்காவுக்கு அதிக ஸ்மார்ட்போன்களை அனுப்பும் நாடு இந்தியா!

அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அனுப்பும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் மெ... மேலும் பார்க்க

தெருநாய்களால் சோகம்! தேசியளவிலான தடகள வீரர் பலி!

ஒடிஸாவில் தெருநாய் கடித்து தேசியளவிலான மாற்றுத்திறனாளி தடகள வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸாவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதியில், போலங்கிர் பகுதியில் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 10) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், ... மேலும் பார்க்க

உபி.: கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலி

உத்தரப் பிரதேசத்தில் கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், சர்காதல் கிராமத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழ கிணற்றில் பம்ப் பெல்ட்டை சரிசெய்ய மூ... மேலும் பார்க்க

இரு வெவ்வேறு வாக்காளர் அட்டைகளுடன் பிகார் துணை முதல்வர்! தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா, இருவேறு வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு... மேலும் பார்க்க

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரகண்டில் நிகழும் காலநிலை மாற்றம், பெருவெள்ளம், நிலச... மேலும் பார்க்க