செய்திகள் :

இந்தியாவிலும் விரைவில் டெஸ்லா! எப்போது?

post image

மின்சார வாகன உற்பத்தியில் பெரிதும் விரும்பப்படும் டெஸ்லா நிறுவனம், தற்போது இந்தியாவிலும் தடம் பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் ஜூலை மாதத்தில், தனது கார் ஷோரூமை டெஸ்லா தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் டெஸ்லா பிரியர்கள் பலரும் நீண்டகாலமாக ஆவலில் உள்ள நிலையில், தற்போது அது சாத்தியமாக உள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில், தற்போது கார் விற்பனையில் மின்சார வாகனங்களே 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக விற்பனையாவதாக தரவுகள் கூறுகின்றன.

இந்த நிலையில்தான், இந்தியாவில் முதலில் மும்பையிலும், தொடர்ந்து தில்லியிலும் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா கார்களைத்தான் இந்தியாவில் இறக்குமதி செய்யவுள்ளனர்.

Model 3

டெஸ்லாவின் மாடல் ஒய் மற்றும் மாடல் 3 கார்கள்தான் இறக்குமதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்தக் கார்களை விற்பனை செய்யத்தான், டெஸ்லா காப்புரிமைக்கான விண்ணப்பம் செய்துள்ளது. இருப்பினும், இந்த 2 மாடல்களிலும் ஒய் மாடலைத்தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

மாடல் ஒய் கார்கள், 526 கி.மீ. மைலேஜ் கொடுப்பதுடன், அதிகபட்சமாக 200 கி.மீ. வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், வெறும் 4.6 விநாடிகளில்யே 96 கி.மீ. வேகத்தை எடுக்கும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரில் 8 கேமராக்கள், தானியங்கி எமர்ஜென்ஸி பிரேக்கிங், மோதாமலிருக்க எச்சரிக்கை உள்பட பல அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. டெஸ்லாவின் மாடல் 3, ரூ. 60 லட்சமாகவும், மாடல் ஒய் ரூ. 70 லட்சமாகவும் நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?

அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்த... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது. ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் ப... மேலும் பார்க்க

ஓய்வூதியம் பற்றி நல்ல செய்தியைத் தெரிவித்த நிதிஷ் குமார்!

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார். பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையி... மேலும் பார்க்க