செய்திகள் :

``இந்தியாவுக்கு வரும் அமெரிக்க நிறுவனங்கள்?'' - ட்ரம்ப் சொல்லும் வர்த்தக ஒப்பந்தம் லாபமா?

post image

இந்தியா - அமெரிக்கா இடையே பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று ட்ரம்ப் கூறி வருகிறார்.

இந்திய அரசின் பக்கத்தில் இருந்து இது வெறும் தகவலாகத் தான் வருகிறதே தவிர, உறுதியாக எதுவும் வெளியில் சொல்லப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் மீண்டும் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது...

"இந்தியா உடன் ஒப்பந்தம் போட இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இந்த ஒப்பந்தம் வேறு மாதிரியாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் படி, நாம் இந்தியாவிற்குள் சென்று, அங்கு போட்டி போட முடியும். இதுவரை இந்தியா தன் நாட்டிற்குள் வேறு யாரையும் வர அனுமதித்ததில்லை.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

ஆனால், இந்தியா இனி அதை செய்யும் என்று நினைக்கிறேன். அதை அவர்கள் செய்தால் என்றால், அவர்களுக்கு நாம் குறைந்த வரி விதிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்" என்று பேசியுள்ளார்.

இந்திய அரசு சொல்ல வேண்டும்!

மேலே கூறியது போல, இந்திய அரசு இந்த ஒப்பந்தம் குறித்து இதுவரை எதுவுமே வெளிப்படுத்தவில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்தே ட்ரம்ப் மூலம் தான் தெரிந்தது. 'உண்மையில் இப்படி ஒரு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறதா?' 'நடந்து வந்தால், அது எந்த மாதிரியான ஒப்பந்தமாக இருக்கும்?' என்று இந்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப் கூறுவதுப்போல, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கப் போகிறதா என்றும் நமக்கு தெரிய வேண்டும். அப்படி வந்தால் இந்தியாவில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்படும்.

இன்னொரு பக்கம், இந்திய நிறுவனங்கள் போட்டிகள் மிகவும் அதிகரிக்கும். அதனால், இந்திய நிறுவனங்கள் தன்னை தானே மேலும் மேம்படுத்த வேண்டும்.

பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க

"டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருந்தவர் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார்.திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

மிஸ்டர் கழுகு: சீனியரை மாற்ற விரும்பாத தலைமை.. டு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய அண்ணன்!

ஆட்டம் காட்டும் மேலிட உறவுப்புள்ளி!சீனியரை மாற்ற விரும்பாத தலைமை...சூரியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சீனியரை மாற்றும் எண்ணத்தில் முதன்மையானவர் இல்லையாம். ஆனாலும், ‘அவர் மாற்றப்பட உள்ளார... மேலும் பார்க்க

TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imperfect Show 2.7.2025

* தலைமைச் செயலக அதிகாரி கொடுத்த அழுத்தம் தான் தனிப்படை விசாரிக்கக் காரணமா?* காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* "SORRY தான் ப... மேலும் பார்க்க

`Ajithkumar lockup death-ல நிகிதா பின்னால் இருப்பது யார்?' Piyus Manush அட்டாக்!

அதிரவைத்த சிவகங்கை சம்பவம். அஜித் குமாருக்கு நடந்த சித்ரவதைகள். இதில் கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல அவர்களோடு பின்னணியில் இருக்கும் உயர் அதிகாரிகளும், குறிப்பாக நிகிதா-வின... மேலும் பார்க்க