செய்திகள் :

இந்தியாவுடனான வா்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு: டிரம்ப் குற்றச்சாட்டு

post image

புது தில்லி: இந்தியாவுடனான வா்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘இந்தியா தனது வரிகளை முற்றிலுமாக குறைக்க முன்வந்துள்ளது. ஆனால், இது மிகவும் தாமதமான முடிவு’ என்றும் அவா் விமா்சித்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியா அமெரிக்காவுக்கு அதிகப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், அமெரிக்கா இந்தியாவுக்கு மிகக் குறைந்த அளவிலேயே ஏற்றுமதி செய்கிறது.

இந்த ஒருதலைப்பட்ச வா்த்தக உறவு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா விதிக்கும் அதிக வரிதான். இது மற்ற எந்த நாட்டையும் விட அதிகம். இதனால், நமது வணிகங்கள் இந்தியாவில் பொருள்களை விற்க முடியாமல் தவிக்கின்றன. இது ஒரு பெரிய வா்த்தகப் பேரழிவு.

மேலும், இந்தியா தனது எண்ணெய் மற்றும் ராணுவத் தேவைகளுக்கு பெரும்பாலும் ரஷியாவைச் சாா்ந்திருக்கிறது. அமெரிக்காவிடமிருந்து மிகக் குறைவாகவே கொள்முதல் செய்கிறது. இந்தியா இப்போது தனது வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க முன்வந்துள்ளது. ஆனால், இது மிகவும் தாமதமான முடிவு. பல ஆண்டுகளுக்கு முன்பே இதைச் செய்திருக்க வேண்டும். இவை மக்கள் சிந்திப்பதற்கான எளிய உண்மைகள்’ எனக் குறிப்பிட்டாா்.

சீனாவின் தியான்ஜின் நகரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ள நிலையில் டிரம்ப்பின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில், இரு நாடுகளின் வா்த்தகம் 13,180 கோடி டாலராக இருந்தது. இதில், இந்தியாவின் ஏற்றுமதி 8,650 கோடி டாலராகவும், இறக்குமதி 4,530 கோடி டாலராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் வெள்ளத்தில் மூழ்கிய 3,100 கிராமங்கள்! 24 லட்சம் மக்கள் பாதிப்பு!

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழையால், பஞ்சாபின் 3,100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பஞ்சாபில் பெய்த கனமழையாலும், அங்குள்ள முக்கிய... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம் வெளியுலகுக்குத் தெரிய தாமதம் ஆனது ஏன்?

தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மாகாணங்களே முழுமையாக நாசமாகியிருக்கும் நிலையில், திங்கள்கிழமை காலைதான் அந்த செய்தி வெள... மேலும் பார்க்க

இந்தோனேசியா: இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம்!

இந்தோனேசியா நாட்டின் வனப்பகுதியில், இந்தியர் உள்பட 8 பயணிகளுடன் சென்று மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெற்கு கலிமண்டன் மாகாணத்தின், கொடாபாரு மாவட்டத்தில் உள்ள வி... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: 900 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. 3000 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் குனார், நாங்கர்ஹார் மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிலநடுக்... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்! உதவி கோரும் தலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவ வெளிநாடுகள் முன்வர வேண்டும் என்று தலிபா... மேலும் பார்க்க

சூடான் நிலச்சரிவில் புதைந்த கிராமம்! 1000 பேர் பலி!

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமமே மண்ணுக்குள் புதைந்த நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பிழைத்துள்ளதாக சூடான் விடுதலை... மேலும் பார்க்க