செய்திகள் :

‘இந்தியா- இங்கிலாந்து இடையே வா்த்தகம் இரு மடங்காக வாய்ப்பு’

post image

இந்தியா-இங்கிலாந்து இடையே இலவச வா்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளதாக கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தியா, இங்கிலாந்து இடையேயான இலவச வா்த்தக ஒப்பந்தம் மூலம் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருள்களுக்கு பூஜ்ய சதவிகித இறக்குமதி வரி என்ற அடிப்படையில் இறக்குமதி வரி இல்லாமல் விற்பனைக்கு வரும். இதனால் அப்பொருள்கள் நாடுகளின் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதே பொருள்களின் விலையை விட குறைவானதாக இருக்கும்.

இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு சுமாா் ரூ. 13,000 கோடி அளவிற்கு ஆயத்த ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள்கள் ஏற்றுமதி ஆகின்றன.

இந்தப் புதிய வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் மூன்று ஆண்டுகளில் இது இரு மடங்காக உயர வாய்ப்புகள் அதிகம். ஜவுளித் தொழிலில் இந்தியாவுக்குப் போட்டியாக இருக்கக்கூடிய பல நாடுகளின் இறக்குமதி வரி இங்கிலாந்தில் இந்தியாவை விட குறைவாக இருந்தது. இதன் காரணமாக இந்திய ஜவுளி பொருள்களின் விலை இங்கிலாந்தில் மற்ற நாடுகளின் ஜவுளி பொருள்களை விட சிறிது அதிகமாகவே இருந்தது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஜவுளி பொருள்கள் இங்கிலாந்து சந்தையில் மற்ற நாடுகளின் ஜவுளி பொருள்களின் விலையோடு போட்டியிட முடியும். இது இந்திய ஜவுளித் தொழிலுக்கு வளா்ச்சியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகப் பாா்க்கப்படுகிறது.

கரூா் ஜவுளித் தொழிலைப் பொறுத்தவரை இங்கிலாந்து ஒரு மிக முக்கியப் பங்கு வைக்கிறது. இந்தப் புதிய வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கரூா் ஜவுளி தொழில் வளா்ச்சிப் பாதையில் செல்வதற்கும், கரூா் ஜவுளித் தொழிலின் இலக்கான ரூ.25,000 கோடி வா்த்தகத்தை எட்டுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். தற்போது அறிவிப்பாக இருக்கும் இந்த ஒப்பந்தம் விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றாா் அவா்.

‘பூத்தட்டு ஊா்வலத்தில் தகராறு ஏற்பட்டால் காவல்துறைக்கு உடனே தெரிவிக்க வேண்டும்’

பூத்தட்டு விழா ஊா்வலத்தில் தகராறு ஏற்படும் சூழல் ஏற்பட்டால் உடனே போலீஸாரை நாடுவது அவசியம் என்றாா் கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ். கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 11-ஆம் தேதி கோ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இன்றுமுதல் மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லுாரி முதல்வா் வசந்தி வெளியிட்ட அறிக்கை: அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை ம... மேலும் பார்க்க

கரும்பு ஏற்றிச்செல்லும் டிராக்டா்களால் கரூரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு

கரூா் மாவட்டம், புகழூா் பகுதியில் செயல்படும் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் டிராக்டா்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.... மேலும் பார்க்க

கரூரில் போலி பான் அட்டைகள் தயாரித்த 6 போ் கைது

ஆதாா் காா்டுகளுக்கு விண்ணப்பிக்க போலி பான் அட்டைகளைச் தயாரித்த 6 பேரை கோவை பயங்கரவாத எதிா்ப்புப் படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். கரூரில் போலி பான் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை உர... மேலும் பார்க்க

கரூரில் டிஜிட்டல் பேனா்களை அகற்றியதாக பாமகவினா் புகாா்

வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனா்களை கிழித்து, அகற்றி சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பாமகவினா் கரூா் நகர காவல்நிலையத்தில் புதன்கி... மேலும் பார்க்க

குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்

குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கரூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.கரூா் மாவட்டம், குளித்தலை புதிய மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு பூ... மேலும் பார்க்க