செய்திகள் :

இந்தியா 'ஏ' கேப்டன் பதவியிலிருந்தும், தொடரில் இருந்தும் விலகிய ஸ்ரேயஸ் ஐயர்; வெளியான தகவல் என்ன?

post image

2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம்பெறாத ஸ்ரேயஸ் ஐயர், ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

முதல் போட்டி 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(செப்.23) லக்னோவில் தொடங்கி இருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி ind vs aus
இரண்டாவது டெஸ்ட் போட்டி ind vs aus

போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்தியா 'ஏ' அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், அணியில் இருந்து திடீரென விலகியிருக்கிறார்.

லக்னோவில் இருந்து உடனடியாக மும்பை திரும்பிய ஸ்ரேயஸ், தனது விலகலுக்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக பிசிசிஐயிடம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இருந்து விலகியதால், முதல் போட்டியில் துணை கேப்டனாக இருந்த துருவ் ஜுரல், அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்திருக்கிறார்.

 ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர்

ஸ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக மாற்று வீரர் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரேயஸின் இந்த திடீர் முடிவு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன் கான்வே ஓபன்

இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வதேசப் போட்டிக்கு முழுக்கு போட்டு 6 வருடங்கள் ஆனாலும், ஐ.பி.எல்லில் இன்னமும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார... மேலும் பார்க்க

Ind Vs Pak: இந்தியாவுக்கெதிரான போட்டியில் சர்ச்சையான AK 47 செலிப்ரேஷன்; பாக்., வீரர் விளக்கம் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.இப்போட்டியில் பாகிஸ்தான் அணியினர், லீக் சுற்றில் இந்தியாவிடம் மோசமா... மேலும் பார்க்க

Ind vs Pak: போராடித் தோற்ற பாகிஸ்தான்; மீண்டும் கைகுலுக்காமல் சென்ற இந்திய வீரர்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை தொடரில், சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 21) மோதின.ஏற்கெனவே செப்டம்பர் 14-ம் தேதி லீக் சுற்றில் இரு அணிகளும் மோதியபோது... மேலும் பார்க்க

Mithun Manhas: BCCI-யின் புதிய தலைவர் இவரா? நாமினேஷன் செய்த முன்னாள் CSK வீரர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி கடந்த ஜூலையில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் தாமாக முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக,... மேலும் பார்க்க

கிங் கோலியின் ஆல் டைம் ரெக்கார்டை தகர்த்த குயின் மந்தனா; ஆஸ்திரேலியாவைப் புரட்டியெடுத்த ஸ்மிருதி!

இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியா vs இலங்கை போட்டியுடன் தொடங்கவிருக்கிறது.அதற்கு முன்பாக, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ... மேலும் பார்க்க

Dunith Wellalage: தந்தைக்கு நேற்று இறுதியஞ்சலி; இரவோடு இரவாக ஆசிய கோப்பைக்கு திரும்பிய இலங்கை வீரர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பைத் தொடர் சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ளது.குரூப் A-ல் 3 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியாவும், 2 வெற்றிகளுடன் இரண்டாமிடம் பிடித்த பாகிஸ்தானும், குரூப... மேலும் பார்க்க