செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: சென்செக்ஸ் அதிரடியாக 2,975 புள்ளிகள் உயர்வு!

post image

மும்பை: நிலம், வான் மற்றும் கடல் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவும் - பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டியதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆரம்ப வர்த்தகத்தில் வெகுவாக மீண்டு வர்த்தகமானது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க இந்தியா மே 7 ஆம் தேதி தொடக்கத்தில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது நினைவிருக்கும்.

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,793.73 புள்ளிகள் உயர்ந்து 81,248.20 புள்ளிகளாகவும் நிஃப்டி 553.25 புள்ளிகள் உயர்ந்து 24,561.25 ஆக இருந்தது. பிறகு சற்று முன்னோக்கி சென்று மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1,949.62 புள்ளிகள் உயர்ந்து 81,398.91 ஆகவும், நிஃப்டி 598.90 புள்ளிகள் உயர்ந்து 24,606.90 ஆகவும் வர்த்தகமானது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,975.43 புள்ளிகளாகவும் நிஃப்டி 916.70 புள்ளிகள் உயர்ந்து 24,924.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் இன்றைய ஆரம்ப வர்த்தகங்களில் நிஃப்டி குறியீட்டு மிகப்பெரிய மீட்சியைத் கண்டது. அதே வேளையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஆக்கபூர்வமான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் உலகளாவிய உணர்வை மேலும் வலுப்படுத்தக்கூடும். நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் முக்கிய உள்நாட்டு பணவீக்க எண்கள் குறித்த கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ், எடர்னல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட் மற்றும் என்டிபிசி ஆகியவை உயர்ந்து முடிந்த நிலையில் சன் பார்மா 5 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது.

சதவிகித அடிப்படையில், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு கிட்டத்தட்ட 4 சதவிகிதம் உயர்ந்து. இது கடந்த 4 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அதிகபட்ச லாபத்தைப் பதிவு செய்தது.

நிஃப்டி ரியாலிட்டி மற்றும் நிஃப்டி ஐடி துறை குறியீடுகள் 6 அல்லது 7% வரை உயர்ந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சிறப்பாக செயல்பட்டு 4.1 சதவிகிதம் வரை உயர்ந்தது.

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர கட்டணங்களில் 90 நாள் இடைநிறுத்தம் ஒப்பந்தம் மற்றும் இஸ்தான்புல்லில் ரஷ்யாவும் உக்ரைனும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதாக வெளியான தகவல்கள் உலகளாவிய கவலைகளைத் தணித்தது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்து முடந்த நிலையில், ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு சரிவுடன் முடிந்தது. கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அமெரிக்க சந்தைகள் கலவையான குறிப்பில் முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.52 சதவிகிதம் உயர்ந்து 64.24 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ரூ.3,798.71 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

ஜோதி லேப்ஸின் 4-வது காலாண்டு லாபம் 2.4% சரிவு, வருவாய் அதிகரிப்பு!

புதுதில்லி: எஃப்எம்சிஜி நிறுவனமான ஜோதி லேப்ஸ் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.4 சதவிகிதம் குறைந்து நிதியாண்டு 2025 மார்ச் காலாண்டில் ரூ.76.27 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.உஜாலா, பிரில், மார... மேலும் பார்க்க

விலை உயர்வை குறித்து ஆலோசித்து வரும் ஐபோன்!

ஆப்பிள் நிறுவனம் தனது வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸை அறிவிக்க உள்ளது.ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை சாதனங்கள் தொடர்பான குறிப்பிடத்த... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தம்: பங்குச்சந்தைகளில் எழுச்சி

பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தம் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது. அதன்படி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமா... மேலும் பார்க்க

லாரி வாடகை ஏப்ரல் மாதம் சீராக இருந்தது: ஸ்ரீராம் மொபிலிட்டி

சென்னை: நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும், பெரும்பாலான வழித்தடங்களில் லாரி வாடகை ஏப்ரல் 2025ல் குறைவாகவே இருந்ததாக ஸ்ரீராம் மொபிலிட்டி இன்று தெரிவித்துள்ளது.லாரி வாடகைகள் ஆண்டுக்கு ... மேலும் பார்க்க

நாட்டில் பல்வேறு விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடல்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்தது 24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுவதாக... மேலும் பார்க்க

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 686 பில்லியன் டாலராக சரிவு!

மும்பை: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, மே 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 206 கோடி டாலர் குறைந்து 68,606 கோடி டாலராக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.முந்தைய வாரத்தில் இது 1.983 பில்லியன் டாலர் ... மேலும் பார்க்க