செய்திகள் :

இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பெரும் பாதிப்பு!

post image

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவிகித வரியால், அமெரிக்காவுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியா மீதான வரிவிதிப்பால், இந்தியாவில் செயல்படும் அமெரிக்காவின் பெப்சி, கோகோ கோலா, கேஎஃப்சி, மெக்டொனால்டு, சப்வே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.

145 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவது, அந்நாட்டில் பெரும் இழப்புகளையும் கடும் சவால்களையும் ஏற்படுத்தும்.

மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் மெக்டொனால்ட்ஸை இயக்கும் வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் லிமிடெட், 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 2,390 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டைவிட 5 சதவிகிதம் அதிகமாகும்.

இதனிடையே, இந்தியாவில் பெப்சிகோவின் வருவாய் 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 8,200 கோடியாக உள்ளது. பெப்சிகோவின் உலகளாவிய முதல் 15 சந்தைகளில் இந்திய சந்தையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் பெப்சிகோ நிறுவனம், சுமார் ரூ. 3,500 முதல் 4,000 கோடி முதலீடு செய்துள்ளது.

பிரான்ஸ், பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டு வரும்நிலையில், இந்தியாவிலும் அவற்றை புறக்கணித்தல் என்பது அமெரிக்காவுக்குத்தான் பேரிழப்பாக அமையும்.

இந்தியா மீது பரஸ்பர வரியாக 50 சதவிகிதம் விதித்த அமெரிக்கா, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்து மேலும் 50 சதவிகித வரியையும் அறிவித்தது.

இந்த வரிவிதிப்பையடுத்து, சுதேசி கொள்கை மீது மத்திய அரசு கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில்,

இந்தியாவை உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற விரும்பும் எந்தவொரு நபரோ அரசியல் கட்சியோ நாட்டின் நலனுக்காகத்தான் பேச வேண்டும். சுதேசி கொள்கையை மக்கள் மனங்களில் ஏற்படுத்த வேண்டும்.

இந்தியன் வியர்வை சிந்தி தயாரித்த பொருள்களை நாம் வாங்கப் போகிறோம். இந்திய மக்களின் திறமையால், வியர்வையால் எதைச் செய்தாலும், அதுதான் சுதேசி என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், உலகில் பொருளாதார சுயநல அரசியல் உள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் சொந்த நலன்களைப் பாதுகாப்பதில்தான் மும்முரமாக உள்ளனர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை மறைமுகமாக விமர்சித்தார்.

இதையும் படிக்க:தெருநாய்களுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்: நீதிபதி நகைச்சுவை

'No Pepsi, Coca-Cola, McDonald's': After Trump's 50% tariffs

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில்,... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடா்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நிலச்சரிவுகள் காரணமாக, ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-கிஷ்த்வாா் தே... மேலும் பார்க்க

பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை

சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம்: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட... மேலும் பார்க்க

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளா்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹா்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வரு... மேலும் பார்க்க