செய்திகள் :

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

post image

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீர்க்க, மே 7 ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலால் உச்சகட்ட பதற்றம் நிலவியது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

எனினும் இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடையை மத்திய அரசு விதித்தது. சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) விதிகளின்படி, ஒரு நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்தக் கூடாது என பிற நாடுகளுக்கு ஒரு மாதம் மட்டுமே தடை விதிக்க முடியும்.

அதன் பிறகு தடையைத் தொடர வேண்டுமானால், அதனை மேலும் நீட்டித்து புதிய உத்தரவை வெளியிட வேண்டும்.

அதன்படி, ஜூன் 24 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் வான் எல்லையை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த முடியாத வகையில் மேலும் மாதத்திற்கு ஜூலை 24 ஆம் தேதி வரை தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை விண்வெளிக்குப் பயணம்!

அரபு நாட்டிலிருந்து ஒரு கோடி வழங்கிய மருத்துவர்: ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் திர்ஹாம்(இந்திய ரூபாயில் சுமார் 1 கோடி) நிதியுதவி வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மர... மேலும் பார்க்க

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியக் கொள்கை; உலகிற்கு எடுத்துரைத்த ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர்

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான கொள்கையை ஆபரேஷன் சிந்தூர் உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதர் மோடி கலந்... மேலும் பார்க்க

கேதாரேஷ்வர் குகைக் கோயில் தூண்கள் பற்றிய மர்மம் உண்மையா? உலக அழிவை சொல்லுமா?

மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள கேதாரேஷ்வர் குகைக் கோயிலைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். சஹ்யாத்ரி மலையின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நீடிப்பதாகத் த... மேலும் பார்க்க

கேமரூனுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா! மீண்டும் 1000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைப்பு!

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியா சார்பில் 1000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் மருத்துவப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேமரூன் நாட்... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி வழக்கு!

பாதுகாப்பு தணிக்கைகள் முடியும்வரை ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிக... மேலும் பார்க்க

ஆற்றில் சிக்கிய படகு வீடு! மீட்புப் பணியில் தேசிய படை!

மகாராஷ்டிர மாநிலத்தில், தொழில்நுட்பக் கோளாரால் ஆற்றின் நடுவே சிக்கிய படகு வீட்டிலுள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பால்கர் மாவட்டத்தின், மஸ்வான் பகுதியிலுள்ள சூர்யா ஆற்றி... மேலும் பார்க்க