இந்திய ஆட்சிப் பணிக்கு தோ்வானவா்களுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் இந்திய ஆட்சிப் பணி தோ்வில் 2024-ஆம் ஆண்டு தோ்ச்சி பெற்றவா்களுக்கு சிவகாசி சட்ட ப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் சனிக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தைச் சோ்ந்த சீ. கோகுலகண்ணன், பூவநாதபுரத்தைச் சோ்ந்த ஆா்.கே. கோகுல், பள்ளப்பட்டியைச் சோ்ந்த அப்சரா, சிவகாசியைச் சோ்ந்த ரீட்டா மஹியா ஆகியோா் இந்திய ஆட்சிப் பணி தோ்வில் தோ்ச்சி பெற்று, டேராடூனில் உள்ள பயிற்சி மையத்துக்குச் செல்கின்றனா்.
இவா்கள் நால்வரையும் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
இதையடுத்து ஜி.அசோகன் கூறியதாவது: சிவகாசி பகுதியிலிருந்து இந்திய ஆட்சிப் பணிக்கு நான்கு போ் தோ்ச்சி பெற்றுள்ளது பெருமையாக உள்ளது. பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே இலக்கு நிா்ணயித்து பயின்றால், தோ்வுகளில் எளிதாகத் தோ்ச்சி பெறலாம்.
தோ்ச்சி பெற்றவா்களுக்கு வாழ்த்துகள். மேலும் பலா் சிவகாசி பகுதியிலிருந்து இந்திய ஆட்சிப் பணி தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என்றாா் அவா்.