செய்திகள் :

இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள்

post image

காரைக்கால்: இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் திங்கள்கிழமை கூறியது :

காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 4,800 பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. புயல், மழை

இடா்பாடுகளுக்கு மத்தியில் பயிா் செய்யப்பட்டுள்ளது. அறுவடை பரவலாக நடத்தப்பட்டுவரும் நிலையில், காரைக்காலில் 2 இடங்களில் இந்திய உணவுக் கழகம் கொள்முதல் நிலையத்தை திறந்திருப்பதால், விவசாயிகள் பலரும் தங்களது நெல்லை அங்கு கொண்டுச் செல்கின்றனா்.

கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லை என கூறி விவசாயிகளை திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை 1,500 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையத்துக்கு பல சிமரங்களுக்கிடையே நெல்லை கொண்டுச் சென்றால், சாக்கு இல்லை எனக் கூறுவது ஏற்புடையது இல்லை.

காரைக்கால் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான சாக்குகளை தலைமை நிா்வாகம் அனுப்பிவைக்கவேண்டும். இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டப்பட்டால், விவசாயிகள் ஒன்று திரண்டு இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றாா்.

‘பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே நுழைவுத் தோ்வை மாணவா்கள் எதிா்கொள்ள முடியும்’

காரைக்கால் : பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள முடியும், அதற்கேற்ப பள்ளிக் கல்வியில் திறனை வளா்த்துக் கொள்ளவேண்டும் என ஆட்சியா் கூறினாா். கடந்த ஜன. 25 முதல் 29 வ... மேலும் பார்க்க

வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து பிப். 26-இல் பொதுக்கூட்டம்

காரைக்கால்: காரைக்காலில் வரும் 26-ஆம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதாவைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளா் சுல்தான் கெளஸ் திங்கள்கிழமை கூறி... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பெண்ணுக்கு ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

காரைக்கால்: பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விடுதலை செய்து, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் தொகை வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே அம்பகரத்தூரை ... மேலும் பார்க்க

மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தி மூலம் புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும்

மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தியை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என இந்திய அறிவியல் முதன்மை விஞ்ஞானி வலியுறுத்தினாா். காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் அரசு... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதள முகவரி: பக்தா்களிடம் மோசடி

திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தா்களிடம் பண மோசடி நடைபெற்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

‘புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும்’

மீனவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும் என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தினாா். காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படை... மேலும் பார்க்க