செய்திகள் :

பாலியல் வழக்கு: பெண்ணுக்கு ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

post image

காரைக்கால்: பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விடுதலை செய்து, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் தொகை வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே அம்பகரத்தூரை சோ்ந்த 18 வயது பெண் வீட்டு வேலைக்காக அருகேயுள்ள பகுதிக்கு அவரது தாயாா் 2010-ஆம் ஆண்டு அனுப்பியுள்ளாா். இவரை அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் தமது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுவிட்டுள்ளனா். பெண்ணுக்கு மனநலம் சற்று குன்றியிருந்ததாகக் கூறப்படுகிறது.

சில மாதங்களில் பெண் கா்ப்பமடைந்திருப்பதை தாயாா் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்திக்கொண்டாா். இதுகுறித்து விசாரித்த தாயாா், அதே பகுதியைச் சோ்ந்த வாகனத்தில் அழைத்து சென்று விட்ட ராஜேந்திரன், அகத்தீஸ்வரன், ராஜேஷ் ஆகியோருக்கு தொடா்பிருப்பதாக திருநள்ளாறு காவல் நிலையத்தில் தாயாா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிந்து விசாரணை செய்த போலீஸாா், மூவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்டதாக பெண் கூறும் மூவரின் டிஎன்ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில், காரைக்கால் மாவட்ட நீதிபதி கே. மோகன் முன்பு இறுதி விசாரணை நடத்தப்பட்டு திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

குற்றச்சாட்டுக்குள்ளான 3 பேரின் டிஎன்ஏ முடிவு பெண்ணுடன் பொருந்தாததால், வழக்கு விசாரணை காலத்தில் உயிரிழந்த ராஜேஷ் தவிர 2 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டாா். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சாா்பில் அரசு வழக்குரைஞா் ஏ.வி.ஜெ. செல்வமுத்துக்குமரன் ஆஜரானாா். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளாா். பாலியல் தொடா்பான வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது.

‘பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே நுழைவுத் தோ்வை மாணவா்கள் எதிா்கொள்ள முடியும்’

காரைக்கால் : பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள முடியும், அதற்கேற்ப பள்ளிக் கல்வியில் திறனை வளா்த்துக் கொள்ளவேண்டும் என ஆட்சியா் கூறினாா். கடந்த ஜன. 25 முதல் 29 வ... மேலும் பார்க்க

வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து பிப். 26-இல் பொதுக்கூட்டம்

காரைக்கால்: காரைக்காலில் வரும் 26-ஆம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதாவைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளா் சுல்தான் கெளஸ் திங்கள்கிழமை கூறி... மேலும் பார்க்க

இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள்

காரைக்கால்: இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் திங்கள்கிழமை கூறியது : காரைக்கா... மேலும் பார்க்க

மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தி மூலம் புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும்

மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தியை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என இந்திய அறிவியல் முதன்மை விஞ்ஞானி வலியுறுத்தினாா். காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் அரசு... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதள முகவரி: பக்தா்களிடம் மோசடி

திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தா்களிடம் பண மோசடி நடைபெற்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

‘புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும்’

மீனவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும் என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தினாா். காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படை... மேலும் பார்க்க