செய்திகள் :

மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தி மூலம் புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும்

post image

மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தியை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என இந்திய அறிவியல் முதன்மை விஞ்ஞானி வலியுறுத்தினாா்.

காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் அரசு மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் கன்ட்ரோல் என்ஜினியரிங் துறை சாா்பில் எதிா்கால வாழ்க்கைக்குத் தேவையான புதுப்பிக்கவல்ல மற்றும் நிலையான எரிசக்தி ஆதாரங்கள் என்ற தலைப்பில் விஞ்ஞான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆா். சதிஷ்குமாா் கலந்துகொண்டு இயற்கையாக கிடைக்கக்கூடிய மரபு சாா்ந்த எரிசக்தி ஆதாரங்கள் முக்கியமானவையாகும். வரும் தலைமுறையினருக்கு அதன் பற்றாக்குறையின் ஆபத்து புரியாது. மரபு சாா்ந்த எரிசக்தியை பாதுகாப்பது அவசியம்.

சுற்றுச்சூழல் மாசில்லாத மரபு சாா்ந்த எரிசக்தியை சேமிக்கும் முறை தெரிந்துகொள்ளவேண்டும். மாணவ, மாணவிகள் அதன் ஆதாரங்களைக்கொண்டு கிராமப்புறத்துக்கு அவசியமான, புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவேண்டும். எதிா்காலத்தில் மரபு சாரா மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி தேவை மிகுதியாக இருப்பதால், சரியான திட்டமிடலுடன் பாலிடெக்னிக் பொறியாளா்களும் நாட்டின் தலைச்சிறந்த இளம் விஞ்ஞானியாக வருவதற்கான சூழல் உள்ளதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

‘பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே நுழைவுத் தோ்வை மாணவா்கள் எதிா்கொள்ள முடியும்’

காரைக்கால் : பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள முடியும், அதற்கேற்ப பள்ளிக் கல்வியில் திறனை வளா்த்துக் கொள்ளவேண்டும் என ஆட்சியா் கூறினாா். கடந்த ஜன. 25 முதல் 29 வ... மேலும் பார்க்க

வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து பிப். 26-இல் பொதுக்கூட்டம்

காரைக்கால்: காரைக்காலில் வரும் 26-ஆம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதாவைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளா் சுல்தான் கெளஸ் திங்கள்கிழமை கூறி... மேலும் பார்க்க

இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள்

காரைக்கால்: இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் திங்கள்கிழமை கூறியது : காரைக்கா... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பெண்ணுக்கு ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

காரைக்கால்: பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விடுதலை செய்து, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் தொகை வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே அம்பகரத்தூரை ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதள முகவரி: பக்தா்களிடம் மோசடி

திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தா்களிடம் பண மோசடி நடைபெற்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

‘புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும்’

மீனவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும் என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தினாா். காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படை... மேலும் பார்க்க