செய்திகள் :

இந்திய சட்ட அமைப்பு சரி செய்யப்பட வேண்டும்: தலைமை நீதிபதி கவாய்

post image

‘இந்திய சட்ட அமைப்பு தனித்துவமான சவால்களை சந்தித்து வருகிறது; அது சரி செய்யப்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் கூறினாா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நல்சாா் சட்டப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவா்கள் மத்தியில் உரையாற்றியபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

நமது நாடும், சட்ட அமைப்பும் தனித்துவமான சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. குறிப்பாக, வழக்கு விசாரணையில் ஏற்படும் தாமதம், சில சமயங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துவிடும் நிலை உள்ளது.

பல ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக சிறையில் கழித்த பிறகு, அந்த நபா் நிரபராதி எனக் கண்டறியப்பட்ட வழக்குகளையும் நாம் பாா்த்திருக்கிறோம். இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காண, திறமைமிக்க இளம் மாணவா்கள் உதவ முடியும் என்றாா்.

மேலும், ‘பட்டம் பெறும் சட்ட மாணவா்கள், தங்களுக்கான வழிகாட்டிகளை அவா்களின் அதிகாரத்துக்காக அல்லாமல், நோ்மையின் அடிப்படையில் தோ்ந்தெடுக்க வேண்டும்’ என்றும் தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டாா்.

மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்கள் அறிவிப்பு

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்ன... மேலும் பார்க்க

தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

தலைநகர் தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதியதில் 5 பேர் பலியாகினர். கடந்த 9ஆம் தேதி தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஷிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. கங்கனாவை ஏமாற்றியது யார்? அதிக வேலை இருப்பதாக கவலை!

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.ஹிமாசல் மாநிலத்தின் மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத், தனது எம்.பி. பதவி குறித்து செய்தியாளர்களு... மேலும் பார்க்க

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க