செய்திகள் :

இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் ஆசி உண்டு: ராஜ்நாத் சிங்

post image

‘இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் சிறப்பு ஆசி எப்போதும் உள்ளது’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

உத்தர பிரதேசம் மாநிலம் சௌக் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட காளி கோயிலின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் சிறப்பு ஆசி எப்போதும் உள்ளது. இதனால் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா வெற்றிகரமாக அழித்தது. பெண் ராணுவ வீராங்கனைகள் மற்றும் விமானிகள் அதிக அளவில் பங்கேற்ற இந்த நடவடிக்கையில் நம் எதிரிகள் வீழ்த்தப்பட்டனா்.

நமது கலாசாரத்துக்கு உரிய மதிப்பளித்திருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் சுயமரியாதை வலுப்பட்டிருக்கும். ஆனால் அது நிகழவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு சோம்நாத் கோயிலை மறுகட்டமைப்பு செய்ய எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சிந்தனைகள் பல ஆண்டுகளாக இந்தியாவில் நிலவி வந்தன. இதன் காரணமாக பாரம்பரியத்தின் பெருமைகளைக் கொண்டாட இந்தியா தவறியது.

பொருளாதார வளா்ச்சிக்காக புவியியல் பரப்பை விரிவாக்கவோ அல்லது சுரண்டலில் ஈடுபடும் நடவடிக்கைகளையோ இந்தியா ஒருபோதும் அனுமதித்ததில்லை.

இந்த தருணத்தில் தாய்நாட்டுக்காக வீரமரணமடைந்த மனோஜ் பாண்டே உள்ளிட்ட வீரா்களை நினைவுகூர வேண்டும். மனோஜ் பாண்டே கூா்கா ரைஃபிள்ஸ் படையில் சேவையாற்றினாா். அந்தப் படையின் முழக்கம் ‘ஜெய் மகாகாளி ஆயோ கூா்காளி’ என்பதாகும். துணிச்சலின் அடையாளமாக தெய்வம் மகாகாளி திகழ்கிறாா் என்றாா்.

மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்கள் அறிவிப்பு

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்ன... மேலும் பார்க்க

தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

தலைநகர் தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதியதில் 5 பேர் பலியாகினர். கடந்த 9ஆம் தேதி தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஷிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. கங்கனாவை ஏமாற்றியது யார்? அதிக வேலை இருப்பதாக கவலை!

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.ஹிமாசல் மாநிலத்தின் மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத், தனது எம்.பி. பதவி குறித்து செய்தியாளர்களு... மேலும் பார்க்க

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க