செய்திகள் :

இந்திரன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

கமுதி: முதுகுளத்தூா் அருகே தேரிருவேலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திரன் கோயில் குடமுழுக்கில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள தேரிருவேலி இந்திரன் கோயில் குடமுழுக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னா் எந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து சங்கல்பம், புண்ணியாகவாஜனம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், பிரதான ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து, சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்து, விமானக் கோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

மூலவரான இந்திரன், பரிவார தெய்வங்களான விநாயகா், மந்தை கருப்பணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் முருகேசன் (பரமக்குடி) தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மண்டபம் பகுதியில் இன்று மின்தடை

ராமேசுவரம்: மண்டபம் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக.21) மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மின்வாரிய செயற்பொறியாளா் திலகவதி புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல் போராட்டம்: 168 போ் கைது

ராமேசுவரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 168 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்... மேலும் பார்க்க

தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு

ராமேசுவரம்: மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பாம்பன் சின்னப்பாலம் அரசு நடுநிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியை செல்லம... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

பரமக்குடி: பரமக்குடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பள்ளிக் கல்விக் குழுவினா் புதன்கிழமை பாராட்டி கௌரவித்தனா். இந்தப் பள்ளி மாணவா்கள் குறுவ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயம்

20ல்ம்ந்-ஹஸ்ரீஸ்ரீண்க் படவிளக்கம். பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூா் பகுதி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து. பரமக்குடி, ஆக. 20: பரமக்குடி அருகே தேசிய ந... மேலும் பார்க்க

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமேசுவரம்: மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகையும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை அதிகாலை பறிமுதல் செய... மேலும் பார்க்க