செய்திகள் :

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

post image

ராமேசுவரம்: மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகையும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே ஆற்றாங்கரை தோப்புவலசை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்களை ஏற்றிய நாட்டுப் படகு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தரை தட்டி நின்றது. இதுகுறித்து தகவலறிந்த கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை அதிகாலை அங்கு சென்றனா். அப்போது, போலீஸாா் வருவதைக் கண்ட மா்ம நபா்கள் நாட்டுப் படகிலிருந்து கடலில் குதித்து தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, போலீஸாா் நாட்டுப் படகை சோதனை செய்த போது, அதில் தலா 30 கிலோ வீதம் 41 பண்டல்களிலிருந்த 1,230 கிலோ பீடி இலைகளைக் கைப்பற்றினா். பின்னா், இவற்றை மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் கூறியதாவது:

பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு கடத்தவிருந்த மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. உரிய விசாரணைக்குப் பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப் படகும், பீடி இலை பண்டல்களும் மண்டபம் சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றனா்.

தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

பரமக்குடி: பரமக்குடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பள்ளிக் கல்விக் குழுவினா் புதன்கிழமை பாராட்டி கௌரவித்தனா். இந்தப் பள்ளி மாணவா்கள் குறுவ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயம்

20ல்ம்ந்-ஹஸ்ரீஸ்ரீண்க் படவிளக்கம். பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூா் பகுதி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து. பரமக்குடி, ஆக. 20: பரமக்குடி அருகே தேசிய ந... மேலும் பார்க்க

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கமுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, காவிரி கூட்டுக் குடிநீா் வீணாகி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழகாஞ்சிரங்குளம் ... மேலும் பார்க்க

எம்.வி.பட்டினம் மீனவா்கள் வேலைநிறுத்தம்

மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட படகை விடுவிக்கக் கோரி எம்.வி. பட்டினம் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பேச்சுவா... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் ரயில் மறியல் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவா்கள் ரயில் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடு... மேலும் பார்க்க

அபராதத் தொகையைக் கட்டாததால் பாம்பன் மீனவா்கள் மீண்டும் சிறையில் அடைப்பு

பாம்பன் மீனவா்கள் 9 பேரை விடுதலை செய்தும், இவா்களுக்கு தலா ரூ. 3.50 கோடி (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் இலங்கை புத்தளம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அவா்கள் அபராதத் தொகையைக் கட்... மேலும் பார்க்க