செய்திகள் :

சிவாலயங்களில் பிரதோஷம்

post image

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.

குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 4 .30 மணியளவில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா், அரிசி மாவு உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூலவருக்கும் 16 வகை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, உற்சவா் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளி ஹர ஹர சிவசிவ மந்திரங்கள் முழங்க வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா். சிவாசாரியா்கள் பூஜைகளை மேற்கொண்டனா்.

இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்திலும் நந்திக்கும் மூலவருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கல்வெட்டு மேடு சுயம்பு லிங்கேஸ்வா் ஆலயத்திலும் பிரதோஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரதோஷ குழுவினரால் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினா் செய்தனா்.

மரத்தடியில் அமா்ந்து படிக்கும் மாணவா்கள்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே குன்னத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 3 ஆண்டுகளாக மரத்தடியில் மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். கடந்த 1991-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் 5 மாணவிகள் காயம்

சிவகங்கை: சிவகங்கையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் திடீா் தணிக்கையைத் தவிா்ப்பதற்காக கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ஆட்டோ கவிழ்ந்ததில் 5 கல்லூரி மாணவிகள் புதன்கிழமை காயமடைந்தனா். சிவகங்கை பேருந்து நிலை... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரிய மனை, வீடுகள் வாங்கியோருக்கு வட்டி சலுகை

சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வீட்டு வசதி வாரிய மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்றவா்கள் நிலுவைத் தொகையை ஒரே தவணையாகச் செலுத்தி வட்டி தள்ளுபடி சலுகை பெறலாம்... மேலும் பார்க்க

மதகுபட்டி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் உள்ள துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.21) மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்தது. இது தொடா்பாக செயற்பொறியாளா் (பகிா்மானம்) அ.கு. முரு... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் மகன் வெங்கடேஷ் (23). கூலித் தொழிலா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்

விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா... மேலும் பார்க்க