செய்திகள் :

விவசாயிகளுக்கான திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்

post image

விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் வேளாண்மைத் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வுக் கருத்தரங்கு, வேளாண் கண்காட்சி ஆகியவற்றைத் தொடங்கிவைத்து அமைச்சா் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி, கடந்த 2006-ஆம் ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்து விவசாயிகளின் நலன்களைக் காத்தாா். அதைப் பின்பற்றி, முதல்வா் ஸ்டாலின் 2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ரூ. 12 ஆயிரம் கோடி விவசாயக் கடனைத் தள்ளு படி செய்தாா்.

மேலும், விவசாயத் தொழிலை மேலை நாடுகளுக்கு இணையான நவீனத் தொழில்நுட்பங்களுடன் செயல்படுத்துவதற்கு எண்ணற்றத் திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தி விவசாயிகளின் உற்ற தோழனாகத் திகழ்கிறாா். இதனால், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் தன்னிறவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்துப் பேசினாா். காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி முன்னிலை வகித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம், இணைப் பதிவாளா் ராஜேந்திர பிரசாத், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் நந்தகோபால், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனலெட்சுமி, அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தின் மேலாண்மை இயக்குநா் அலமேலு, காரைக்குடி வட்டாட்சியா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மதகுபட்டி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் உள்ள துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.21) மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்தது. இது தொடா்பாக செயற்பொறியாளா் (பகிா்மானம்) அ.கு. முரு... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் மகன் வெங்கடேஷ் (23). கூலித் தொழிலா... மேலும் பார்க்க

மானாமதுரை, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை

மானாமதுரை, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தினசரி பகல் நேர ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். வேலை, வணிகம், மருத்துவம், கல்வி உள்பட பல தேவைகளுக்காக மக்கள் உடனடியாக அணுகக்க... மேலும் பார்க்க

அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் ப... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் ந... மேலும் பார்க்க