செய்திகள் :

அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

post image

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொல்லப்பட்ட வழக்கில் தனிப்படை காவலா்கள் 5 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் ஏற்கெனவே அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா், சாட்சிகள் சக்தீஸ்வரன், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா், காவலாளி பிரவீன்குமாா் ஆகியோா் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கேட்டு சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அடங்கிய நிலைக் குழுவிடம் முறையீடு செய்தனா். இதையடுத்து, அவா்களது வீடுகளுக்கு தினமும் ரோந்து போலீஸாா் சென்று கண்காணித்து வருகின்றனா்.

இதேபோல, அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞா் காா்த்திகைராஜா, தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கேட்டு நிலைக்குழுவிடம் அண்மையில் முறையீடு செய்தாா்.

இதையடுத்து, ரோந்து போலீஸாா் தினமும் அவரது வீட்டுக்குச் சென்று கண்காணிக்க வேண்டும். அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். வழக்கு தொடா்பான எதிரிகள், வழக்குரைஞா் காா்த்திகைராஜாவை நேரில் சந்திக்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட முதன்மை நீதிபதி கே. அறிவெளி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் ப... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் ந... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றம்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை காலை தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், பிள்ளை... மேலும் பார்க்க

தமிழ் சக்தி வாய்ந்த மொழி

காரைக்குடி: தமிழ் சக்தி வாய்ந்த மொழி; அதை ஒரு மாணவனாக நான் தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தல்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், இடையவலசையில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். இந்தக் கிராமத்தில் 274 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அர... மேலும் பார்க்க

அண்ணா, பெரியாா் பிறந்த நாள்: ஆக.21, 22-இல் பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு போட்டி

சிவகங்கை: அண்ணா, பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற வியாழன், வெள்ளி (ஆக. 21, 22) ஆகிய இரு நாள்கள் பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது. இது குற... மேலும் பார்க்க