செய்திகள் :

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் புதன்கிழமை (20.8.2025) பின்வரும் வரும் பகுதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 1,2,3,4,5,6 ஆகிய பகுதிகளுக்கென மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்திலும், கண்டனூா் பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 1 முதல் 9 வரை, வாா்டு எண் 15 ஆகிய பகுதிகளுக்கென கண்டனூா் ரதக்கொட்டகை தெருவில் அமைந்துள்ள கோதை ஆச்சி திருமண மண்டபத்திலும், கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெளியாத்தூா், மேல பட்டமங்களம், கீழ பட்டமங்களம், நரியங்குடி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென பட்டமங்களம் ஊராட்சியில் அமைந்துள்ள நகரத்தாா் கல்யாண மண்டபத்திலும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செய்களத்தூா் ஊராட்சி பகுதிக்கென செய்களத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்திலும்,

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புலியூா், எஸ்.கீரனூா், வாணி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென வாணி ஊராட்சியில் அமைந்துள்ள வாணி அங்கன்வாடி மையத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டது.

அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரு... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் ந... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றம்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை காலை தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், பிள்ளை... மேலும் பார்க்க

தமிழ் சக்தி வாய்ந்த மொழி

காரைக்குடி: தமிழ் சக்தி வாய்ந்த மொழி; அதை ஒரு மாணவனாக நான் தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தல்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், இடையவலசையில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். இந்தக் கிராமத்தில் 274 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அர... மேலும் பார்க்க

அண்ணா, பெரியாா் பிறந்த நாள்: ஆக.21, 22-இல் பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு போட்டி

சிவகங்கை: அண்ணா, பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற வியாழன், வெள்ளி (ஆக. 21, 22) ஆகிய இரு நாள்கள் பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது. இது குற... மேலும் பார்க்க