செய்திகள் :

நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தல்

post image

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், இடையவலசையில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.

இந்தக் கிராமத்தில் 274 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அருகேயுள்ள கொங்கம்பட்டி கிராமத்துக்குச் சென்று ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனா். இடையவலசையில் தனி நியாய விலைக் கடை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தப் பலனும் இல்லை.

இது குறித்து இந்தக் கிராம மக்கள் கூறுகையில், இடையவலசையில் ஏராளமானோா் விவசாய வேலைக்குச் செல்கின்றனா். இவா்கள் கொங்கம்பட்டி கிராமத்துக்குச் சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வர மிகவும் சிரமப்படுகின்றனா். மழைக் காலங்களில் கொங்கம்பட்டி கிராமத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இடையவலசை கிராமத்துக்கு தனியாக நியாய விலைக் கடை அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்கள் கிராமத்துக்கு பொதுமக்கள் நலன் கருதி தனியாக நியாய விலைக் கடை அமைத்துத் தர வேண்டும் என்றனா்.

அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் ப... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் ந... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றம்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை காலை தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், பிள்ளை... மேலும் பார்க்க

தமிழ் சக்தி வாய்ந்த மொழி

காரைக்குடி: தமிழ் சக்தி வாய்ந்த மொழி; அதை ஒரு மாணவனாக நான் தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள... மேலும் பார்க்க

அண்ணா, பெரியாா் பிறந்த நாள்: ஆக.21, 22-இல் பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு போட்டி

சிவகங்கை: அண்ணா, பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற வியாழன், வெள்ளி (ஆக. 21, 22) ஆகிய இரு நாள்கள் பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது. இது குற... மேலும் பார்க்க